Skip to main content

Happy Teeth: உடையும் பற்கள், வெள்ளை நிறப் புள்ளிகள்... Fluorosis பிரச்னையாக இருக்கலாம்..!

அனைத்துப் பற்களும் சீராக ஒரே நிறத்தில் இல்லாமல், அங்கங்கே கறை பிடித்தது போலவும், வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது போல பல் அமைப்பு இருப்பதைப் பார்த்திருப்போம். குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தப் பிரச்னை பொதுவாகக் காணப்படுகிறது. இதனை மருத்துவ சொற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) என்கின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா.

ஃப்ளூரோசிஸ் (Fluorosis)

ஃப்ளூரைடு (Fluoride) என்பது இயற்கையாக உருவாகும் ஒருவகை தாதுப்பொருள் (mineral). இது நிலத்தடி நீரில் காணப்படலாம். நாம் சாப்பிடும் பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுகளிலும் குறைந்த அளவில் காணப்படும். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்போது ஃப்ளூரைடு உடலின் உள்ளே செல்கிறது. நம் உடல் அளவுக்கு அதிகமாக ஃப்ளூரைடை கிரகிக்கும்போது ஏற்படும் பிரச்னைதான் ஃப்ளூரோசிஸ். இந்தப் பிரச்னை பற்களிலும் (Dental Fluorosis) அல்லது எலும்பிலும் (Skeletal Fluorosis) ஏற்படலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

பற்களில் வெள்ளை நிற புள்ளிகள், பழுப்பு நிறமாக மாறுவது, பற்களின் மேலே உள்ள லேயரான எனாமல் நீங்கி உடைவது (Chipping) போன்றவை இதற்கான அறிகுறிகள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். பற்களில் ஏற்படும் ஃப்ளுரோசிஸ் பிரச்னையை லேசான, மிதமான, தீவிர பாதிப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம்.

பற்களில் ஏற்படும் ஃப்ளுரோசிஸ் பிரச்னையை லேசான, மிதமான, தீவிர பாதிப்பு என்று மூன்றாகப் பிரிக்கலாம்.

லேசான பாதிப்பு எனும்போது பற்களில் வெள்ளை நிறப்புள்ளிகள் மட்டுமே காணப்படும். சிலருக்கு ஒரே ஒரு பல்லில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படலாம். மற்ற பற்களைவிட அந்தப் பல் சற்று அடர் நிறத்திலும் காணப்படலாம். மீதமுள்ள பற்கள் இயல்பான நிறத்தில் இறக்கும். மிதமான பாதிப்பு எனும்போது பற்கள் பழுப்பு நிறமாக மாறும். சில பற்களில் மேடு பள்ளங்கள் போல தோன்றும் சீரற்ற மேற்பரப்பு காணப்படும். சீரற்ற மேற்பரப்பு இருப்பதால் பற்களின் மேல் பாறை படிந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தீவிரநிலையில் பாதிக்கப்பட்ட பல்லின் வலிமை குறைந்து அது உடைய ஆரம்பிக்கும்.

பற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) பிரச்னை ஏற்படுவதில் ஒரே ஒரு நன்மை உண்டு. லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதாக பற்சொத்தை ஏற்படாது. இதுபோன்ற பாதிப்புள்ளவர்கள் முறையாக பிரஷ் செய்து வாய் சுகாதாரத்தைப் பேணினால் பற்சொத்தை எளிதில் தாக்காது. ஆனால், ஈறு சார்ந்த நோய்கள், பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பற்களில் ஃப்ளூரோசிஸ் (Fluorosis) பிரச்னை ஏற்படுவதில் ஒரே ஒரு நன்மை உண்டு. லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு எளிதாக பற்சொத்தை ஏற்படாது.

பற்களின் நிறம், தோற்றத்தை சரி செய்வதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால், உடலின் உள்ளே இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. பற்கள் உடைந்த, உடையும் நிலையில் இருந்தால் அதற்கு மேல் ஒரு கவர் போல பொருத்தி (Crowning) சிகிச்சை அளிக்கப்படும். இது பல் மேலும் சேதமடையாமல் தடுக்கும்.

ஃப்ளூரோசிஸ் பிரச்னை இருக்கும் குழந்தைகள் ஃப்ளூரைடு சேர்க்கப்படாத டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னை இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் குறிப்பிட்ட அளவு ஃப்ளூரைடு இருக்க வேண்டும். காரணம், ஃப்ளூரைடு என்ற தாது, பல்லின் மேலே படிந்து பல் சொத்தையாவதைத் தடுக்கும்.

பல் மருத்துவர் ஏக்தா

தருமபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருக்கும் நிலத்தடி நீரில் இயற்கையாகவே அதிகமாக ஃப்ளூரைடு காணப்படும். ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்தால்கூட ஃப்ளூரைடு நீங்காது. வீடுகளில் இருக்கும் தண்ணீரில் சிறிது படிகாரம் போட்டு சிறிது நேரம் வைக்கும்போது அடியில் ஒரு லேயர் போல படியும். அதற்குப் பிறகு அந்த நீரை வடிகட்டி (மட்டுமே) பயன்படு்த்தலாம்.

இந்த முறையில் சுத்தம் செய்யும்போதும் தண்ணீரில் இருக்கும் ஃப்ளூரைடு முழுவதுமாக நீங்காது. குறிப்பிட்ட அளவு ஃப்ளூரைடு தண்ணீரில் காணப்படும். ஆனால், அது பற்களை பாதிக்கும் அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்தாது என்பதால் இதைப் பின்பற்றலாம்" என்றார்.  

Happy Teeth

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...