Skip to main content

Happy Marriage: வயசு விஷயமே கிடையாது; இந்த 5 விஷயங்கள் இருந்தா போதும்... காமத்துக்கு மரியாதை - 171

புதிதாகத் திருமணமானவர்கள் மட்டுமல்ல, திருமணமாகிப் பல வருடங்களான தம்பதிகளுக்கும் அடிக்கடி வரும் சந்தேகம் இது. 'ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மறுமுறை உறவுகொள்ள முடியும்' என்கிற கேள்விதான் அது. இதற்கான பதிலைச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

''இந்தக் கேள்விக்கான பதில் திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன; தம்பதியரிடையே இருக்கிற காதல்; ஈர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்தது. சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது என்றால், ஒருமுறை உறவுகொண்ட அடுத்த ஐந்தாவது நிமிடமே மறுபடியும் உறவு வைத்துக்கொள்ள கணவன், மனைவி இருவராலுமே முடியும். மனதுக்குப் பிடித்ததைப் புதிதாகச் செய்ய ஆரம்பிக்கையில் கிடைக்கிற உற்சாகத்துக்கும் சிலிர்ப்புக்கும் அணை போட முடியாது என்பதால், புதிதாகத் திருமணமானவர்களால் ஒரே நாளில் பலமுறை உறவு வைத்துக்கொள்ள முடியும். எல்லோருடைய தேனிலவு நாள்களும் இப்படித்தான் இருக்கும்.

Relationship

திருமணமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன என்றால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு பழகியிருப்பார்கள். உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் `புதிது' என்ற எண்ணம் குறைய ஆரம்பித்திருக்கும். விளைவு, தாம்பத்திய உறவின் மீதான ஆர்வம் ஓரளவுக்கோ, சற்று கூடுதலாகவோ குறைய ஆரம்பிக்கும். ஒருமுறைக்கும் அடுத்த முறைக்கும் இடையில் 2 அல்லது 3 நாள்கள்கூட ஆகலாம். இதுவும் தனியறை, மனநிலை, பரஸ்பர விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

காதலிக்கும்போது, கூடவே இருக்க வேண்டும்; தொட்டுப் பேச வேண்டும்; முத்தமிட வேண்டும் என்பதுபோன்ற உணர்வுகள் ஆண், பெண் மனங்களுக்குள் தொடர்ந்துகொண்டே இருக்கும். திருமணமான பிறகு, இந்த உணர்வை மறுபடியும் உணர முடியாதல்லவா? இதே உணர்வுதான் தாம்பத்திய உறவிலும் நிகழும்.

Dr. Kamaraj

விந்து வெளியேறியவுடன் ஆண்களுக்கு `refractory period' தேவைப்படும். `ஓய்வு நிலை' என்று இதைச் சொல்லலாம். சிலருக்கு சில நிமிடங்கள், சிலருக்கு சில மணி நேரம் என்று இந்த பீரியட் ஆணுக்கு ஆண் வேறுபடும். இந்த நேரத்தில் மனைவி தூண்டுதல் கொடுத்தால், கணவனால் வெகு சீக்கிரமாக மறுபடியும் உறவில் ஈடுபட முடியும். தவிர, உறவுகொண்ட பிறகு, அன்றைய தினம் அவர்களுடைய உறவு எப்படியிருந்தது, இருவருக்கும் அது இனிமையாக இருந்ததா, ஒருவரையொருவர் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பனவற்றைப் பொறுத்தும் அடுத்த உறவு நிகழும்.

இளவயதினரால் மட்டுமே சில நிமிட இடைவெளியில் உறவுகொள்ள முடியும் என்றில்லை. 60 வயது, ஆனால், பார்ட்னர் புதியவர் என்றால் அடுத்தடுத்து 10 நிமிட இடைவெளியில் இரண்டு, மூன்று முறை உறவுகொள்ள முடியும். சுத்தமாக இருப்பது, அழகுபடுத்திக்கொள்வது, தனிமை, வெவ்வேறு நிலைகள், நிறைய காதல்... இந்த 5 விஷயங்களும் இருந்தால் எந்த வயதிலும் 5 நிமிட இடைவெளியில் இரண்டாவது முறை உறவுகொள்ள முடியும்'' என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...