Skip to main content

Doctor Vikatan: மதியம் ஆரம்பித்து இரவில் உச்சம் தொடும் தலைவலி... காரணமும், தீர்வும் என்ன?

Doctor Vikatan: எனக்கு மதிய நேரத்தில் லேசாக தலைவலி ஆரம்பித்து மாலை நேரத்தில் அதிகரித்து இரவு ஒன்பது மணிக்கு உச்சத்தை அடைகிறது. வாந்தி எடுத்து  குடல் சுத்தமான  பிறகு தான் குறைகிறது. தலைவலி ஆரம்பிக்கும்போதே நான் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வேன். அப்படி எடுத்துக் கொண்டால் அரை மணி நேரத்தில் தலைவலி சரியாகி விடுகிறது. மாதம் ஒருமுறை இதுபோல் தலைவலி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. தீர்வு என்ன?

-kjprakash123, விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மற்றும்  நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா.

நோய்க்குறியியல் மருத்துவர் மோனிகா

தலைவலியில் பல வகைகள் உள்ளன. டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டாலும் தலைவலி வரலாம். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் அதன் அறிகுறியாக தலைவலி வரலாம். பவர் அதிகமானாலோ, குறைந்தாலோ, பார்வை மங்கினாலோ தலைவலிக்கலாம். பார்வையில் பிரச்னை இருப்பதை அலட்சியப்படுத்திவிட்டோ, அறியாமலோ, கண்ணாடி அணியாமல் இருப்பவர்களுக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம்.

சிலருக்கு ஒரு பக்கம் வலிக்கிற ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) ஏற்படலாம். இந்த வகை தலைவலியில் வாந்தி வரும். வாந்தி எடுத்து முடிக்கிறவரை தலைவலி தொடரும். டென்ஷன் தலைவலி என சிலருக்கு வரும். ஸ்ட்ரெஸ் காரணமாக ஏற்படுகிற இந்தத் தலைவலி, மதியம் தொடங்கி, மாலை, இரவு நெருங்க, நெருங்க அதிகமாகும். மூளையில் ஏதேனும் பிரச்னை இருப்பதன் அறிகுறியாகவும் தலைவலி உணரப்படலாம்.

வெயிலில், வெளியில் நீண்ட நேரம் அலைந்து, வியர்வை அதிகம் வெளியேறி, தண்ணீரே குடிக்காதவர்களுக்கு உடலில் நீர் வறட்சி ஏற்பட்டிருக்கும். எனவே, இவர்கள் தலைவலி ஏற்படும்போது அதை நீர்வறட்சியின் அறிகுறியாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் தலைவலியை உணர்பவர்கள், நரம்பியல் மருத்துவரை அணுகி, அது ஒற்றைத் தலைவலியா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள், செரட்டோனின் இன்ஹிபிட்டர்ஸ் (serotonin inhibitors) என்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.  அதுதான் முதல் சிகிச்சையாக இருக்கும். அந்த மருந்தில் தலைவலி குணமாவது தெரிந்தாலே, அது மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்  தலைவலி என உறுதியாகும்.

Vomiting (Representational Image)

குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பார்வைக் குறைபாடுகள் இருந்தால் சிகிச்சை எடுப்பது, கண்ணாடி அணிவது போன்றவற்றைப் பின்பற்றினாலே தலைவலி சரியாவதை உணரலாம்.  காரணம் அறியாத தலைவலியாக இருந்தால், நரம்பியல் மருத்துவரின் பரிந்துரையோடு எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்ன பிரச்னை என்பதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

தலைவலி வரும்போது ஒவ்வொரு முறையும் நீங்களாக பாராசிட்டமால் (Paracetamol ) மாத்திரை எடுப்பது மிகவும் தவறு. உங்கள் தலைவலிக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்வதுதான் சரியானது. நீங்களாக சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. நீண்டகாலமாக பாராசிட்டமால் எடுப்பது கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகளுக்கு நல்லதல்ல என்பதால் அதன் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டியது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...