Skip to main content

Doctor Vikatan: இரவு நேரத்தில் நாவறட்சி, பாதிக்கப்படும் தூக்கம்... என்ன காரணம், தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போவதாக உணர்கிறேன். அதற்காக தண்ணீர் குடித்தால் இரண்டு மணி நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. தூக்கம் கெட்டுப் போகிறது. இதற்கான தீர்வு என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

இரவு நேரத்தில் ஏற்படும் தொண்டை வறட்சிக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஜலதோஷம், சைனஸ் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் இரவு நேரத்தில் தொண்டை வறண்டு போகிற மாதிரி இருக்கும். உடனே சிறிது தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். 

சிலருக்கு வாயைத் திறந்துகொண்டு தூங்கும் பழக்கம் இருக்கும். அந்தப் பழக்கத்தாலும் இரவில் தொண்டை வறட்சி ஏற்படலாம். சைனஸ், குறட்டை, 'அப்ஸ்ரக்ட்டிவ் ஸ்லீப் ஆப்னியா' (Obstructive sleep apnea) பாதிப்பு என  வாயைத் திறந்துகொண்டே தூங்கும் பழக்கத்துக்கும் பல காரணங்கள் இருக்கலாம்.  ஒருவேளை நாவறட்சி ஏற்படுகிறது என்றால், அது உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியாகவும் இருக்கலாம். அதற்கு நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் மட்டும் தண்ணீர் குடிப்பது சரியானதல்ல. அப்படிக் குடித்தால் சிறுநீர் கழிக்கும் உந்துதல் நிச்சயம் வரும். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல தூக்கமும் பாதிக்கப்படும். 

குறட்டை

எனவே, பகல் வேளை முழுவதும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் 7 அல்லது 8 மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவது நல்லது. அதன் பிறகு தாகம் எடுத்தால் சிறிதளவு மட்டுமே தண்ணீர் குடிக்கலாம். எனவே, இந்தப் பழக்கத்தை சில நாள்கள் பின்பற்றிப் பாருங்கள். உடலில் நீர்வறட்சி ஏற்படாது என்பதால் இரவில் நாக்கும் வறண்டு போகாது. தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதனால் தூக்கம் பாதிப்பது போன்ற பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.

ஒருவேளை உங்களுக்கு ஏற்படும் தொண்டை வறட்சிக்கு சைனஸ், குறட்டை, வாயைத் திறந்து தூங்கும் பழக்கம் என மேற்குறிப்பிட்ட வேறு காரணங்கள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையோடு அவற்றுக்கான தீர்வுகளைப் பெறவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...