Skip to main content

Doctor Vikatan: இரண்டுங்கெட்டான் நேரத்தில் பசி, இரவில் பசியின்மை... எப்படிச் சமாளிக்கலாம்?

Doctor Vikatan: மதியம் ஒரு மணிக்கு உணவு உண்ட பிறகு நான்கு மணிக்கு பசி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நொறுக்குத்தீனிகள் எதையாவது சாப்பிட்டால், இரவு நேரத்தில் பசி எடுப்பதில்லை. இடைப்பட்ட நேரத்தில்  என்ன சாப்பிடலாம்... எவ்வளவு சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

இடைப்பட்ட நேரத்தில் பசி எடுக்கும்போது நீங்கள் பழங்கள் சாப்பிடலாம். அது ஆரோக்கியமானதாக இருக்கும். பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடையும் கூடாது. வயிறு நிறைந்த உணர்வையும் பெறுவீர்கள். 

ஆனால், சிலருக்கு சூடாக ஏதேனும் சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். அவர்கள், கைப்பிடி அளவு வேர்க்கடலையை வறுத்துச் சாப்பிடலாம். அது வேண்டாம் என்பவர்கள் அரிசிப் பொரியை வறுத்துவிட்டு, அதில் மஞ்சள் தூள், வேர்க்கடலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து மொறுமொறுப்பாகச் சாப்பிடலாம். அரிசிப் பொரியில் செய்கிற மண்டகி என்ற உணவு கர்நாடகாவில்  மிகவும் பிரபலம். அரிசிப் பொரியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்துவிட்டு அதில் விருப்பமான மசாலா சேர்த்துச் சாப்பிடுவார்கள். இதுவும் வயிற்றுக்கு இதமாக இருக்கும். 

அவல் மிக்ஸர்

அவலில் தயாரிக்கப்படும் மிக்ஸர் சாப்பிடலாம். சிவப்பு அவலை எண்ணெயில் பொரிக்காமல், லேசாக எண்ணெய் விட்டு வறுத்துச் சாப்பிடலாம்.  உலர் பழங்கள் சாப்பிடுவதும் சிறந்த உணவாக இருக்கும். வால்நட்ஸ், பாதாம் தலா ஐந்து,  இரண்டு பேரீச்சம் பழம். மற்றும் இரண்டு அத்திப்பழம் (நறுக்கியது) என எல்லாவற்றையும் கலந்து சாப்பிடலாம். இத்துடன் டிரை ரோஸ்ட் செய்த கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்தும் சாப்பிடலாம். நேரமும் வசதியும் இருந்தால் ஸ்மூத்தி செய்து குடிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட உணவுகளுடன் ஒரு கப் கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம்.  உணவு இடைவேளைகளுக்கு இடையில் இப்படி மிகவும் மிதமான உணவுகளைச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. பசியைத் தணிப்பதாக நினைத்துக்கொண்டு மினி டிபன், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளைச் சாப்பிட்டால் அடுத்த வேளை சாப்பிட முடியாது. செரிமானம் பாதிக்கப்படும். உடல் எடையும் அதிகரிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...