Skip to main content

Doctor Vikatan: Pre-diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: Pre- diabetes உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி தெரிவிக்கவும். Pre diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?

puviarasu punnaghai, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி

ரேச்சல் தீப்தி

ப்ரீ டயாபடிஸ் (Pre diabetes) எனப்படும் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில், வாழ்வியல் மாற்றங்களும், உடற்பயிற்சிகளும் மிக முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.  வாக்கிங், ஜாகிங், யோகா, ஜிம் பயிற்சிகள் போன்று ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். தூக்கம் முறையாக இருக்க வேண்டியது முக்கியம். இரவு 10 மணிக்குத் தூங்கச் சென்று காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

ப்ரீடயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லாவிட்டால், அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ப்ரீ டயாபடிஸ் நிலையில் சிலர் அதிக உடல்பருமனுடன் இருப்பதையும் பார்க்கிறோம். சராசரி எடையில் இருப்பவர்கள் அதிகபட்ச ஸ்ட்ரெஸ்ஸுடன் வருவதையும் பார்க்கிறோம். இந்த இரண்டுமே சரியானதல்ல. இவர்கள் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.  பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து, பாலிஷ் செய்யாத முழுத்தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். 

சிவப்பரிசி, பழுப்பரிசி, ஸ்டீல் கட் ஓட்ஸ், கீன்வா போன்றவற்றில் நார்ச்சத்தும் பிற சத்துகளும் நிறைந்திருக்கும். இவற்றை உணவுப்பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால், சப்ளிமென்ட்டுகளின் தேவையின்றியே அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.

சிவப்பரிசி சாப்பாடு

காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து இவர்களுக்கு மிக முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிட்டாலே போதுமானது. மாவுச்சத்தில்லாத காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பிற காய்கறிகளை காலை உணவின்போது 200 கிராம், மதிய உணவின்போது 200 கிராம், இரவு உணவுடன் 200 கிராம் என பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  கீரைகள், புரொக்கோலி, காலிஃபிளவர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவை மிகவும் நல்லவை. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை சர்க்கரைநோயாளிகள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை.

இவர்களுக்குப் புரதச்சத்து மிகமிக முக்கியமானது. அது சைவம் அல்லது அசைவம் என எந்தப் புரதமாகவும் இருக்கலாம். இதையும் மூன்று வேளை உணவோடும் எடுக்க வேண்டும். அசைவத்தில் சிக்கன், மீன், மட்டன், முட்டை போன்றவற்றிலிருந்து புரதம் கிடைக்கும். சைவ உணவுக்காரர்கள் வெள்ளை மற்றும் கறுப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவற்றிலிருந்து புரதச்சத்தைப் பெறலாம். இப்படி உணவுப்பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவானது சராசரியாக மாறும்.  சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், அரிசிக்கு பதில் முழு தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயம்

சோடா,  சர்க்கரை சேர்த்த ஜூஸ், வெள்ளை பிரெட், அரிசி மாவு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு இப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலே, ப்ரீடயாபடிக் நிலையை நிச்சயம் ரிவர்ஸ் செய்ய முடியும். ப்ரீ டயாபடிஸ் என்பது டயாபடிஸ் என்ற நிலைக்கு முன்னேறாமல் தடுக்க முடியும்.

இவற்றுடன் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர், லவங்கம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர், சீரகம், சோம்பு சேர்த்த தண்ணீர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ப்ரீ டயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கென பிரத்யேக உணவுப்பழக்கம் எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்டபடி பேலன்ஸ்டு உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலே போதுமானது. கூடவே, ரீஃபைண்டு ஆயில் உபயோகத்தைத் தவிர்த்துவிட்டு, செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்தலாம். நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...