Skip to main content

Doctor Vikatan: Pre-diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: Pre- diabetes உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் பற்றி தெரிவிக்கவும். Pre diabetes நிலையை உணவுப்பழக்கத்தின் மூலம் ரிவர்ஸ் செய்ய முடியுமா?

puviarasu punnaghai, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி

ரேச்சல் தீப்தி

ப்ரீ டயாபடிஸ் (Pre diabetes) எனப்படும் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலையில், வாழ்வியல் மாற்றங்களும், உடற்பயிற்சிகளும் மிக முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.  வாக்கிங், ஜாகிங், யோகா, ஜிம் பயிற்சிகள் போன்று ஏதேனும் ஒரு பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். தூக்கம் முறையாக இருக்க வேண்டியது முக்கியம். இரவு 10 மணிக்குத் தூங்கச் சென்று காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

ப்ரீடயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லாவிட்டால், அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ப்ரீ டயாபடிஸ் நிலையில் சிலர் அதிக உடல்பருமனுடன் இருப்பதையும் பார்க்கிறோம். சராசரி எடையில் இருப்பவர்கள் அதிகபட்ச ஸ்ட்ரெஸ்ஸுடன் வருவதையும் பார்க்கிறோம். இந்த இரண்டுமே சரியானதல்ல. இவர்கள் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.  பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து, பாலிஷ் செய்யாத முழுத்தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். 

சிவப்பரிசி, பழுப்பரிசி, ஸ்டீல் கட் ஓட்ஸ், கீன்வா போன்றவற்றில் நார்ச்சத்தும் பிற சத்துகளும் நிறைந்திருக்கும். இவற்றை உணவுப்பழக்கத்தில் முறைப்படுத்திக் கொண்டால், சப்ளிமென்ட்டுகளின் தேவையின்றியே அனைத்து ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.

சிவப்பரிசி சாப்பாடு

காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து இவர்களுக்கு மிக முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிட்டாலே போதுமானது. மாவுச்சத்தில்லாத காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பிற காய்கறிகளை காலை உணவின்போது 200 கிராம், மதிய உணவின்போது 200 கிராம், இரவு உணவுடன் 200 கிராம் என பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.  கீரைகள், புரொக்கோலி, காலிஃபிளவர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவை மிகவும் நல்லவை. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவை சர்க்கரைநோயாளிகள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை.

இவர்களுக்குப் புரதச்சத்து மிகமிக முக்கியமானது. அது சைவம் அல்லது அசைவம் என எந்தப் புரதமாகவும் இருக்கலாம். இதையும் மூன்று வேளை உணவோடும் எடுக்க வேண்டும். அசைவத்தில் சிக்கன், மீன், மட்டன், முட்டை போன்றவற்றிலிருந்து புரதம் கிடைக்கும். சைவ உணவுக்காரர்கள் வெள்ளை மற்றும் கறுப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவற்றிலிருந்து புரதச்சத்தைப் பெறலாம். இப்படி உணவுப்பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொண்டால், ரத்தச் சர்க்கரை அளவானது சராசரியாக மாறும்.  சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், அரிசிக்கு பதில் முழு தானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயம்

சோடா,  சர்க்கரை சேர்த்த ஜூஸ், வெள்ளை பிரெட், அரிசி மாவு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு இப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலே, ப்ரீடயாபடிக் நிலையை நிச்சயம் ரிவர்ஸ் செய்ய முடியும். ப்ரீ டயாபடிஸ் என்பது டயாபடிஸ் என்ற நிலைக்கு முன்னேறாமல் தடுக்க முடியும்.

இவற்றுடன் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர், லவங்கம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர், சீரகம், சோம்பு சேர்த்த தண்ணீர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ப்ரீ டயாபடிஸ் நிலையில் உள்ளவர்களுக்கென பிரத்யேக உணவுப்பழக்கம் எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்டபடி பேலன்ஸ்டு உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினாலே போதுமானது. கூடவே, ரீஃபைண்டு ஆயில் உபயோகத்தைத் தவிர்த்துவிட்டு, செக்கில் ஆட்டிய எண்ணெய் பயன்படுத்தலாம். நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...