Skip to main content

இஸ்ரேல் தாக்குதலை `இனப்படுகொலை' என்று கூறிய இஸ்லாமிய செவிலியர்; டிஸ்மிஸ் செய்த அமெரிக்க மருத்துவமனை!

பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.All Eyes On Rafah

ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் இந்த 8 மாத தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மனிதாபிமான உதவிகளைச் செய்துவருபவர்கள் என கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 81,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபாவில் (Rafah) தாக்குதல் நடத்தக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட... இரண்டாவது நாளிலேயே அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு, பொதுமக்களில் கிட்டத்தட்ட 45 பேர் பலியாகினர்.

உலகநாடுகள் பலவும் இஸ்ரேலைக் கண்டித்தன. சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கானவர்கள் `All Eyes On Rafah' என்ற புகைப்படத்தைப் பதிவிட்டுவந்தனர். இதற்கும் எதிராகப் பலர், ஹமாஸ் செய்தது மட்டும் நியாயமா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இஸ்ரேலும், `அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது? (Where Were Your Eyes On October 7?)' என கேள்வியெழுப்பியது.ராஃபா - இஸ்ரேல்

இதற்கிடையில், ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட, அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்களைக் கண்டு, இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில்கொண்டு இஸ்ரேலை போர் நிறுத்துமாறு கூறிவருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியராகப் பணியாற்றிவரும் பாலஸ்தீனிய-அமெரிக்க இஸ்லாமிய பெண், இஸ்ரேல் தாக்குதலை இனப்படுகொலை என்று கூறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, அவர் பணியாற்றும் NYU லாங்கோன் ஹெல்த் மருத்துவமனையானது, கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது குழந்தைகளை இழந்த தாய்மார்களுடன் பணிபுரிந்ததற்காக பிரசவ செவிலியர் ஹெசென் ஜாபருக்கு (Hesen Jabr) மே 7-ம் தேதி விருது வழங்கியது. அந்த நிகழ்ச்சியில், தான் விருது வாங்கியது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றியது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்திருந்தார்.செவிலியர் பணிநீக்கம்

அந்த வீடியோவில், `காஸாவில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையில், எனது நாட்டைச் சேர்ந்த பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்து வருவது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது" என்று ஹெசென் ஜாபர் பேசியிருக்கிறார்.

அதற்கு எதிர்வினையாக, மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து நேற்று பேசிய மருத்துவமனை செய்தித் தொடர்பாளர், ``இந்தப் பிரச்னையில் தனது சொந்த கருத்தை பணியிடத்தில் கொண்டுவர வேண்டாம் என ஏற்கெனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டது. அப்படியிருந்தும் சமீபத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால், ஊழியர்கள் பலர் வருத்தமடைந்தனர். இதன் விளைவாக, இனி அவர் இங்கு செவிலியர் அல்ல" என்றார்.All Eyes On Rafah: பற்றி எரிகிறது மனிதநேயம்; அப்பாவி மக்கள் மீது எல்லை மீறும் இஸ்ரேலும் எதிர்ப்பும்!


http://dlvr.it/T7dvNQ

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...