Skip to main content

இஸ்ரேல் தாக்குதலை `இனப்படுகொலை' என்று கூறிய இஸ்லாமிய செவிலியர்; டிஸ்மிஸ் செய்த அமெரிக்க மருத்துவமனை!

பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் குழுவினர் பணயக்கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு எதிர் தாக்குதல் என்ற பெயரில் அக்டோபர் 8-ம் தேதி அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனத்தின் காஸா (Gaza) பகுதியில் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.All Eyes On Rafah

ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் இந்த 8 மாத தாக்குதலில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், மனிதாபிமான உதவிகளைச் செய்துவருபவர்கள் என கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 81,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஐந்து நாள்களுக்கு முன்பு, பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபாவில் (Rafah) தாக்குதல் நடத்தக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட... இரண்டாவது நாளிலேயே அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு, பொதுமக்களில் கிட்டத்தட்ட 45 பேர் பலியாகினர்.

உலகநாடுகள் பலவும் இஸ்ரேலைக் கண்டித்தன. சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கானவர்கள் `All Eyes On Rafah' என்ற புகைப்படத்தைப் பதிவிட்டுவந்தனர். இதற்கும் எதிராகப் பலர், ஹமாஸ் செய்தது மட்டும் நியாயமா என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இஸ்ரேலும், `அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது? (Where Were Your Eyes On October 7?)' என கேள்வியெழுப்பியது.ராஃபா - இஸ்ரேல்

இதற்கிடையில், ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட, அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்களைக் கண்டு, இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில்கொண்டு இஸ்ரேலை போர் நிறுத்துமாறு கூறிவருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் செவிலியராகப் பணியாற்றிவரும் பாலஸ்தீனிய-அமெரிக்க இஸ்லாமிய பெண், இஸ்ரேல் தாக்குதலை இனப்படுகொலை என்று கூறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, அவர் பணியாற்றும் NYU லாங்கோன் ஹெல்த் மருத்துவமனையானது, கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது குழந்தைகளை இழந்த தாய்மார்களுடன் பணிபுரிந்ததற்காக பிரசவ செவிலியர் ஹெசென் ஜாபருக்கு (Hesen Jabr) மே 7-ம் தேதி விருது வழங்கியது. அந்த நிகழ்ச்சியில், தான் விருது வாங்கியது மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றியது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்திருந்தார்.செவிலியர் பணிநீக்கம்

அந்த வீடியோவில், `காஸாவில் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் இனப்படுகொலையில், எனது நாட்டைச் சேர்ந்த பெண்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்து வருவது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது" என்று ஹெசென் ஜாபர் பேசியிருக்கிறார்.

அதற்கு எதிர்வினையாக, மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து நேற்று பேசிய மருத்துவமனை செய்தித் தொடர்பாளர், ``இந்தப் பிரச்னையில் தனது சொந்த கருத்தை பணியிடத்தில் கொண்டுவர வேண்டாம் என ஏற்கெனவே ஒருமுறை எச்சரிக்கப்பட்டது. அப்படியிருந்தும் சமீபத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால், ஊழியர்கள் பலர் வருத்தமடைந்தனர். இதன் விளைவாக, இனி அவர் இங்கு செவிலியர் அல்ல" என்றார்.All Eyes On Rafah: பற்றி எரிகிறது மனிதநேயம்; அப்பாவி மக்கள் மீது எல்லை மீறும் இஸ்ரேலும் எதிர்ப்பும்!


http://dlvr.it/T7dvNQ

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...