Skip to main content

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்... 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த பெண், தமரா பேங்க்ஸ். இவருடைய 4 வயது மகள் 2022 ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது மருத்துவ சோதனையில், கடுமையான நீரிழிவு நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பல பற்கள் அவள் இறக்கும்போது அழுகியிருந்தன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தமரா பேங்க்ஸ்

அதன் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் தம்பதிக்கு இருந்த ஒரு மகன் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். மேலும், அவர் கண்டறியப்படாத நீரிழிவு நோயால் 4 வயதில் கோமாவில் விழுந்தார். தற்போது அவர்களின் இன்னொரு மகள் 4 வயதில் நீரிழிவு நோயால் இறந்திருக்கிறார்.

முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். சிறுமிக்கு 24 கிராமுக்கும் குறைவான சர்க்கரையே கொடுக்க வேண்டும். ஆனால், நியான்-கிரீன் சர்க்கரை கலந்த பேபி ஃபார்முலா பாட்டில்களை அடிக்கடி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு பாட்டிலில் 77 கிராம் சர்க்கரை உள்ளது. ஜனவரி 2022- ல் சிறுமி தீவிரமான மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நாள்கள் செல்லச் செல்ல சிறுமியின் நோய் மோசமடைந்திருக்கிறது.மகளுடன் தமரா பேங்க்ஸ்

மூச்சு விடுவதைச் சிறுமி நிறுத்திய பிறகே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நீரிழிவு நோய் இருக்கும் மகளுக்கு மவுன்டைன் டியூ சோடாவை அதிக அளவில் கொடுத்ததால்தான் சிறுமியின் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. இந்தக் கொலைக்காக தமரா பேங்க்ஸ்க்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் சில திங்களில் கிறிஸ்டோபர் ஹோப்க்கும் தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb'என்ன குழந்தை?' - பாலினம் அறிய 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை!


http://dlvr.it/T7Q2zM

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...