Skip to main content

கடும் நீரிழிவு நோய்; அழுகிப்போன பற்கள்... 4 வயது மகளின் இறப்புக்குக் காரணமான தாய்க்குச் சிறை!

அமெரிக்காவின் ஓஹியோ பகுதியைச் சேர்ந்த பெண், தமரா பேங்க்ஸ். இவருடைய 4 வயது மகள் 2022 ஜனவரி மாதம் உயிரிழந்தார். அவரது மருத்துவ சோதனையில், கடுமையான நீரிழிவு நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பல பற்கள் அவள் இறக்கும்போது அழுகியிருந்தன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தமரா பேங்க்ஸ்

அதன் அடிப்படையில், சிறுமியின் பெற்றோர் தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில், தமரா பேங்க்ஸ் - கிறிஸ்டோபர் ஹோப் தம்பதிக்கு இருந்த ஒரு மகன் மிக மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். மேலும், அவர் கண்டறியப்படாத நீரிழிவு நோயால் 4 வயதில் கோமாவில் விழுந்தார். தற்போது அவர்களின் இன்னொரு மகள் 4 வயதில் நீரிழிவு நோயால் இறந்திருக்கிறார்.

முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததே சிறுமியின் மரணத்திற்குக் காரணம். சிறுமிக்கு 24 கிராமுக்கும் குறைவான சர்க்கரையே கொடுக்க வேண்டும். ஆனால், நியான்-கிரீன் சர்க்கரை கலந்த பேபி ஃபார்முலா பாட்டில்களை அடிக்கடி கொடுத்திருக்கிறார். அதில் ஒரு பாட்டிலில் 77 கிராம் சர்க்கரை உள்ளது. ஜனவரி 2022- ல் சிறுமி தீவிரமான மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நாள்கள் செல்லச் செல்ல சிறுமியின் நோய் மோசமடைந்திருக்கிறது.மகளுடன் தமரா பேங்க்ஸ்

மூச்சு விடுவதைச் சிறுமி நிறுத்திய பிறகே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நீரிழிவு நோய் இருக்கும் மகளுக்கு மவுன்டைன் டியூ சோடாவை அதிக அளவில் கொடுத்ததால்தான் சிறுமியின் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. இந்தக் கொலைக்காக தமரா பேங்க்ஸ்க்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இன்னும் சில திங்களில் கிறிஸ்டோபர் ஹோப்க்கும் தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb'என்ன குழந்தை?' - பாலினம் அறிய 8 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றை வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை!


http://dlvr.it/T7Q2zM

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...