Skip to main content

Doctor Vikatan: அடிக்கடி தர்மசங்கடத்துக்குள்ளாக்கும் Vaginal Odor... நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 29. சமீபத்தில்தான் திருமணமானது. எனக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும், பீரியட்ஸ் நாள்களிலும் வெஜைனா பகுதியில் ஒருவித மோசமான வாடை வருகிறது. இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இப்படி வாடை வீச என்ன காரணம்... இதிலிருந்து மீள சிகிச்சைகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். 

நித்யா ராமச்சந்திரன்

நம்முடைய வாய்ப்பகுதியில் உமிழ்நீர் சுரக்கும். அதனால் வாய்ப்பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதைப் போலவே, பெண்களுக்கு வெஜைனா பகுதியும் ஈரத்தன்மையுடன் இருக்கும். அந்தப் பகுதியில் உள்ள சுரப்பிகள் மற்றும் நிணநீர் கணுக்கள் காரணமாக, அங்கே அத்தகைய ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படிச் சுரக்கும் எல்லா கசிவுகளுமே அசாதாரணமானவையல்ல. உடலின் கீழ்ப்புறத்தில் இருப்பதாலும், வெளிச்சம் படாமல் இருப்பதாலும் அங்கே பாக்டீரியாக்களும் இருக்கும். வெஜைனாவுக்கென்று இப்படித்தான் பிரத்யேக வாடை  இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில் வெஜைனாவின் வாடையை நாம் உணர்வதில்லை. காலையில் எழுந்து பல் துலக்காதபோதுதான் வாய் துர்நாற்றம் என்பதை நாம் உணர்வோம். அதேபோல, வெஜைனா பகுதியில் ஏதேனும் தொற்றோ, அசாதாரணமான கசிவோ ஏற்படும்போதுதான் அந்த வாடையை உங்களால் உணர முடியும்.

அப்படி வித்தியாசமான வாடையை உணரும்போது, அதை நீக்க சென்ட், வெஜைனல் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு இதுபோன்ற தயாரிப்புகளை உபயோகிக்கச் சொல்லியிருந்தால் மட்டும்தான் உபயோகிக்க வேண்டும். வெஜைனா பகுதியில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால், நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, வெஜைனா பகுதியில் ஈஸ்ட் அல்லது பூஞ்சைத் தொற்று எளிதில் பரவ ஏதுவாகும்.

Vaginal Infection

மீன் போன்ற வாடை, அழுகிய இறைச்சி வாடை போன்று வந்தால் அது 'பாக்டீரியல் வெஜைனோசிஸ்' (Bacterial vaginosis) என்ற  இன்ஃபெக்ஷனின் அறிகுறிதான்.  இந்தத் தொற்றுடன் ஒருவித வெள்ளைநிற கசிவும் இருக்கும். அடுத்தநிலையில் அது மஞ்சள் அல்லது பச்சை நிறக் கசிவாகவோ, நுரையுடனோ மாறும். இது அசாதாரணமானது. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அடுத்து டாம்பூன் உபயோகிக்கும் பெண்கள், அதை அகற்ற மறந்துவிட்ட நிலையிலும் வெஜைனாவிலிருந்து மோசமான வாடை வரலாம். சாதாரண நாப்கினையை பல மணி நேரம் மாற்றாத நிலையில்  வாடையை எழுப்பும்.

எனவே, அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். பீரியட்ஸ் நாள்களில் ஒருவித மெட்டல் வாடை வீசக் காரணம், ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து. அதேபோல தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வாடை வரலாம். இவை குறித்து  பயப்பட வேண்டியதில்லை. வெஜைனாவை வெதுவெதுப்பான நீரால் கழுவினாலே போதுமானது. வாசனை திரவங்கள், வாசனையான சோப் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...