Skip to main content

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan: வருடத்தில் பெரும்பாலான நாள்களில் சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிக்கிறோம். சம்மர் சீசனில் அவற்றையே தொடர்ந்து உபயோகிக்கலாமா.... வெயிலுக்கேற்றபடி வேறு மாற்ற வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

கோடையின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, வெறும் சன் ஸ்கிரீனை மட்டும் மாற்றினால் போதாது. கிளென்சரில் இருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும். பருக்கள் வரும் சருமம் என்றால் சாலிசிலிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்கள், லாக்டிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்தலாம்.

அடுத்து மாய்ச்ச்சரைஸர்... இது ஜெல் வடிவிலோ, நீர் வடிவிலோ, லோஷன் வடிவிலோ இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். முன்பெல்லாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தும்போது உடனடியாக ஒருவித சூடான உணர்வு ஏற்படும். அதைத் தடவியதும் வியர்த்துக் கொட்டும். அப்படியில்லாமல் இப்போது கூலிங் தன்மையைக் கொடுக்கும் சன் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்கள் சருமத்துக்குப் பொருத்தமானதை மருத்துவரிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.

அதற்கு மேல் பவுடர் போடலாம்.  டால்கம் பவுடர் என்பது கூடுதல் சன் ஸ்கிரீன் போல செயல்படும். எண்ணெய் வழியாமலும் தடுக்கும்.  

இரவில் முகத்தை நன்கு கழுவிவிட்டு, வாரத்தில் ஒரு நாள் எக்ஸ்ஃபோலியேட் (exfoliate) செய்யலாம். நிறைய பேருக்கு வெயில் காலத்தில் நெற்றி, மூக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொரிப்பொரியாக வரும். அளவுக்கதிக சீபம் உற்பத்திதான் இதற்கு காரணம்.  முதுகிலும் மார்புப்பகுதியிலும் பொடுகு காணப்படும். எனவே, ஒருநாள்விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும்.  ஜிம் போகிறவர்கள் தினமுமே தலைக்குக் குளிக்க வேண்டும்.

Sunscreen

முகத்துக்கு மட்டும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது போதாது. உடல், கை, கால்கள் என வெயில்படும் எல்லா இடங்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியம். அதற்காக முகத்துக்கு உபயோகிக்கும் அதே சன் ஸ்கிரீனை உடலுக்கும் பயன்படுத்துவது கட்டுப்படியாகாது.  உடலுக்கான சன் ஸ்கிரீன் அதிலும் வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக பார்த்து வாங்குங்கள். குடை, ஸ்கார்ஃப் உபயோகிக்கத் தயங்காதீர்கள். தரமான, காட்டன் உடைகளை மட்டும் அணியுங்கள். சிந்தெடிக் உடைகளை அணிவதால், அக்குள் பகுதிகளில் கட்டிகள்கூட வரலாம். 

புறப்பூச்சுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கும் கொடுங்கள். மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தைப் பாதுகாக்கும்.   கோடையில் மஞ்சள் தடவுவது, மஞ்சள் கலந்த அழகு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மஞ்சள் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதில் சந்தேகமில்லை.

குடிக்கும் பாலில் தொடங்கி, சமைக்கும் உணவுகள் வரை மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், வெளியே சருமத்தில் பூசுவதில் கவனம் தேவை. மஞ்சள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதைத் தடவுவதால், வேண்டாம் என நினைத்த சூரியஒளியை நாமே தேடிப் போவதுபோலாகி விடும்.

எனவே, மற்ற நாள்களில் உபயோகிக்கும் அழகு சாதனங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, சம்மர் சீசனுக்கேற்ற பிரத்யேக ஃபேஸ்வாஷ், சன்ஸ்கிரீன் என எல்லாவற்றையும் மாற்றி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...