Skip to main content

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா?

Doctor Vikatan: வருடத்தில் பெரும்பாலான நாள்களில் சன் ஸ்கிரீன், ஃபேஸ்வாஷ், மாய்ஸ்ச்சரைசர் எல்லாம் உபயோகிக்கிறோம். சம்மர் சீசனில் அவற்றையே தொடர்ந்து உபயோகிக்கலாமா.... வெயிலுக்கேற்றபடி வேறு மாற்ற வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

கோடையின் தாக்கத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, வெறும் சன் ஸ்கிரீனை மட்டும் மாற்றினால் போதாது. கிளென்சரில் இருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும். பருக்கள் வரும் சருமம் என்றால் சாலிசிலிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் சென்சிட்டிவ்வான சருமம் கொண்டவர்கள், லாக்டிக் ஆசிட் உள்ள கிளென்சர் பயன்படுத்தலாம்.

அடுத்து மாய்ச்ச்சரைஸர்... இது ஜெல் வடிவிலோ, நீர் வடிவிலோ, லோஷன் வடிவிலோ இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். முன்பெல்லாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தும்போது உடனடியாக ஒருவித சூடான உணர்வு ஏற்படும். அதைத் தடவியதும் வியர்த்துக் கொட்டும். அப்படியில்லாமல் இப்போது கூலிங் தன்மையைக் கொடுக்கும் சன் ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்கள் சருமத்துக்குப் பொருத்தமானதை மருத்துவரிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்துங்கள்.

அதற்கு மேல் பவுடர் போடலாம்.  டால்கம் பவுடர் என்பது கூடுதல் சன் ஸ்கிரீன் போல செயல்படும். எண்ணெய் வழியாமலும் தடுக்கும்.  

இரவில் முகத்தை நன்கு கழுவிவிட்டு, வாரத்தில் ஒரு நாள் எக்ஸ்ஃபோலியேட் (exfoliate) செய்யலாம். நிறைய பேருக்கு வெயில் காலத்தில் நெற்றி, மூக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொரிப்பொரியாக வரும். அளவுக்கதிக சீபம் உற்பத்திதான் இதற்கு காரணம்.  முதுகிலும் மார்புப்பகுதியிலும் பொடுகு காணப்படும். எனவே, ஒருநாள்விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்க வேண்டும்.  ஜிம் போகிறவர்கள் தினமுமே தலைக்குக் குளிக்க வேண்டும்.

Sunscreen

முகத்துக்கு மட்டும் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது போதாது. உடல், கை, கால்கள் என வெயில்படும் எல்லா இடங்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியம். அதற்காக முகத்துக்கு உபயோகிக்கும் அதே சன் ஸ்கிரீனை உடலுக்கும் பயன்படுத்துவது கட்டுப்படியாகாது.  உடலுக்கான சன் ஸ்கிரீன் அதிலும் வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக பார்த்து வாங்குங்கள். குடை, ஸ்கார்ஃப் உபயோகிக்கத் தயங்காதீர்கள். தரமான, காட்டன் உடைகளை மட்டும் அணியுங்கள். சிந்தெடிக் உடைகளை அணிவதால், அக்குள் பகுதிகளில் கட்டிகள்கூட வரலாம். 

புறப்பூச்சுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கும் கொடுங்கள். மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பல வண்ணக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தைப் பாதுகாக்கும்.   கோடையில் மஞ்சள் தடவுவது, மஞ்சள் கலந்த அழகு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மஞ்சள் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதில் சந்தேகமில்லை.

குடிக்கும் பாலில் தொடங்கி, சமைக்கும் உணவுகள் வரை மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால், வெளியே சருமத்தில் பூசுவதில் கவனம் தேவை. மஞ்சள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதைத் தடவுவதால், வேண்டாம் என நினைத்த சூரியஒளியை நாமே தேடிப் போவதுபோலாகி விடும்.

எனவே, மற்ற நாள்களில் உபயோகிக்கும் அழகு சாதனங்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, சம்மர் சீசனுக்கேற்ற பிரத்யேக ஃபேஸ்வாஷ், சன்ஸ்கிரீன் என எல்லாவற்றையும் மாற்றி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...