Skip to main content

Doctor Vikatan: திடீர் வாய்வுப்பிடிப்பு, அஜீரணம்.... உடனடி நிவாரணம் தருமா வீட்டு வைத்தியங்கள்?

Doctor Vikatan: திடீரென ஏற்படும் வாய்வுப்பிடிப்பு, அஜீரணத்துக்கு  ஆண்டாசிட்ஸ்  (antacids) எடுத்துக்கொள்வது தான் தீர்வா? உடனடி நிவாரணத்துக்கு உதவக்கூடிய எளிமையான வீட்டு வைத்தியங்கள் சொல்ல முடியுமா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

செரிமானத்துக்கான ஆண்டாசிட்ஸ் (antacids ) மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். முந்தைய காலத்தில் எல்லாம், செரிமானப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதளவு சீரகத்தையோ, சோம்பு, ஓமம் போன்றவற்றையோ  நீரில் கொதிக்கவைத்துக் குடிக்கும் பழக்கம் இருந்தது. 

பெரிய விருந்துகளில் வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அஜீரண கோளாறு ஏற்படாமலிருக்க, சீரகம் கொதிக்க வைத்த நீர் குடிப்பார்கள். அதுவே கோடைக்காலம் என்றால் சீரகத்தை ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பார்கள்.  இவையே ஆண்டாசிட் மருந்துகளைப் போன்ற பலன்களைத் தந்தன. இவற்றில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மைகளின் காரணமாக, வயிற்றுப் புண்கள் வராமலும் உதவின.

Tablets (Representational Image)

ஆனால், இந்தக் காலத்தில் விளம்பரங்களைப் பார்த்தும், மருத்துவரின் பரிந்துரையின்றியும்  செரிமானத்துக்கான மாத்திரைகள், மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவது எளிதாகிவிட்டது. ஆண்டாசிட் மருந்துகள் என்பவை, வலிக்கான மாத்திரைகள் எடுக்கும்போது சேர்த்து எடுக்க வேண்டியவை. தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுப்புண்கள் இருக்கும் நிலையில் மருத்துவர்கள் இந்த மருந்துகளை குறிப்பிட்ட அளவு, குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் பரிந்துரைப்பார்கள். 

ஆண்டாசிட் மருந்துகள் பற்றிய தகவல்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தாலே அவற்றின் பக்க விளைவுகளைத் தெரிந்துகொள்வீர்கள். எனவே, மருத்துவரின் பரிந்துரையின்றி ஆண்டாசிட் மருந்துகளை எடுக்கவே கூடாது. அஜீரண பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண பல வழிகள் உள்ளன. 

அதிகம் சாப்பிட்டுவிட்டதாக உணர்ந்தால், அடுத்தவேளை சாப்பாட்டைத் தவிர்த்துவிடுவதுகூட அஜீரண பிரச்னையிலிருந்து விடுதலை தரும். மேற்குறிப்பிட்ட சீரகம், ஓமம், சோம்புத் தண்ணீரும் உதவும்.

சீரகம்

சித்த மருத்துவத்தில் சீரகச் சூரணம், ஏலாதிச் சூரணம் போன்றவை செரிமான பிரச்னைகளுக்கான மருந்துகளாகப் பரிந்துரைக்கப்படுபவை. இவற்றை கைவசம் வீட்டில் வைத்திருக்கலாம். அஜீரணம் ஏற்படும்போது இவற்றில் அரை டீஸ்பூன் சாப்பிட்டாலே உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணர்வீர்கள்.

முன்கூட்டியே ஆண்டாசிட் மருந்துகளை எடுத்துக்கொண்டு விருந்துகளுக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். எப்போதும் கையில் செரிமானத்துக்கான மாத்திரை, மருந்துகளை வைத்திருப்போரும் இருக்கிறார்கள். இந்தச் சூழல் நிச்சயம் மாற வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...