Skip to main content

Baby loss Certificate: கருவில் இறக்கும் குழந்தையை அங்கீகரிக்க சான்றிதழ்... வரவேற்கும் பெண்கள்!

கருவுறும் பெண்கள் அனைவரும் குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. எதிர்பாராத விதமாக சில குழந்தைகள் கருவிலேயே இறந்துவிடுகின்றன. காலங்கள் போகப் போக இறந்த குழந்தையின் நினைவுகள் பெற்றோரைத் தாண்டி யாருக்கும் தெரிவதில்லை. 

தோன்றாமலே மறைந்து போன உயிரின் நினைவுகள் யாரும் அறியாமலேயே மறைந்து போகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அரசு`Baby loss Certificate’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

Miscarriage

24 வாரங்களுக்கு முன்பு வரை கர்ப்பமாக இருந்து, குழந்தையை இழந்த பெற்றோருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நேரிடும் குழந்தையின் இழப்பை முறையாக அங்கீகரிக்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

`Baby loss Certificate’ பெறத் தகுதியானவர்கள் யார்?!

கர்ப்பமாகி 24 வாரங்களுக்கு முன்பு குழந்தையை இழந்த இங்கிலாந்து பெண்கள் தங்கள் குழந்தையை நினைவுகூர்வதற்கான சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம். இச்சான்றிதழைப் பெற 16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

அதோடு சான்றிதழுக்காக விண்ணப்பிப்பவர்கள் செப்டம்பர் 1, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு குழந்தையை இழந்திருக்க வேண்டும்.  இதற்காக எந்தவித மருத்துவ ஆதாரத்தையும் வழங்கத் தேவையில்லை. குழந்தையின் இழப்பானது மருத்துவக் குழு  அல்லது மருத்துவரால் பதிவு செய்யப்படாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

என் நினைவுபெட்டியில் சிறு உயிரை சேமிக்கிறேன்...

இது குறித்து கர்ப்பமாக இருந்தபோது குழந்தையை இழந்த லாரா என்ற பெண் கூறுகையில், ``2020-ல் எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. இது என்னையும் என் கணவரையும் பாதித்தது, இது நாங்கள் அடிக்கடி பேசும் விஷயமல்ல. ஆனால், இறந்த என் குழந்தையை என்னால் மறக்கவே முடியாது. அந்த இழப்பு என்னில் ஒரு பகுதி.

கர்ப்பத்தில் ஏற்பட்ட இழப்பு குறித்து என் குழந்தைகளுடன் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச விரும்புகிறேன். என்னை மகனுக்கு தற்போது 6 வயதாகிறது. எனது வயிற்றில் ஒரு சிறிய குழந்தை, அவனது சகோதரன் அல்லது சகோதரி இருந்தது அவனுக்குத் தெரியும்.

நம் குழந்தை இருந்ததை நிரூபிக்கும் அதிகாரபூர்வ ஆவணத்தை வைத்திருப்பது, வரவிருக்கும் ஆண்டுகளில் பேசுவதற்கும், நம் நினைவகப் பெட்டியில் வைத்திருப்பதற்கும் முக்கியமானது’’ என்றார். 

வெல்ஷ் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் குழந்தை இழப்பு சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது...

Baby loss Certificate குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...