Skip to main content

Doctor Vikatan: விரதமிருக்கும்போது ஏற்படுகிற மயக்கம்... தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான் சமீபகாலமாக விரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், நான்கைந்து மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலே லேசாக மயக்கம் வருவது எதனால்... இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பல மாதங்களாக, வருடங்களாக நீங்கள் விரதம் இருந்திருக்க மாட்டீர்கள். அதனால் திடீரென எதுவும் சாப்பிடாத நிலையில், உங்கள் உடலானது அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும்.

சமீப காலமாக பலருடம் இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்ற டயட் முறையைப் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். உங்கள் விஷயத்திலும் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த யாரோ அதைப் பின்பற்றுவதைக் கேள்விப்பட்டு நீங்களும் அதைச் செய்ய நினைத்திருக்கலாம். இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையில் 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் என அவரவர் விருப்பத்துக்கேற்ப இடைவெளி எடுத்துக்கொள்வார்கள். 

இளநீர்! #TenderCoconut

நீங்களும் பல மணி நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு உடல் பலவீனமானது போலவோ, வெலவெலத்துப் போனது போலவோதான் இருக்கும். திடமாக எதுவும் சாப்பிடாமல் இருக்கும் இடைவெளியில் வெறும் தண்ணீருக்கு பதில், இளநீர், எலெக்ட்ரால், நீர்மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். இதெல்லாம் உடல் வெலவெலத்துப் போகாமல் காக்கும். மயக்கமும் வராது.

விரதமிருப்பதற்கு உங்கள் உடலானது பழக வேண்டும். முதலில் குறைந்த மணி நேரத்திலிருந்து தொடங்கவும். இரண்டு, மூன்று முறை அதைப் பின்பற்றினால் உடல் அதற்குப் பழகிவிடும்.  ஆனால், சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலே உடல் வெலவெலத்துப் போவது போல உணர்ந்தால் நீங்கள் ரத்தச் சர்க்கரை அளவை செக் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு நீரிழிவு பாதித்திருக்கலாம். 

களைப்பு | மாதிரிப்படம்

எனவே, முதலில் நீரிழிவுக்கான பரிசோதனை மேற்கொண்டு, ஒருவேளை அது உறுதியானால் முறையான சிகிச்சைகளைப் பின்பற்றத் தொடங்குங்கள். உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் 'தாழ்சர்க்கரை நிலை' இருக்கிறதா என்றும் பாருங்கள். நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது என்று சொல்வோம். அந்தவகையில் ஒருவேளை உங்களுக்கு நீரிழிவு இருந்தால், நீங்கள்  இப்படி பலமணி நேரம் சாப்பிடாமல் இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். 

மற்றபடி, சாதாரண நபர்களுக்கு விரதமிருக்கத் தொடங்கிய புதிதில் உடல் பழகும்வரை பலவீனமாக இருக்கும். போகப் போகப் பழகிவிடும். சர்க்கரைத் தண்ணீரோ, சர்க்கரை சேர்த்த ஜூஸோ குடிக்காமல், வெறும் பழச்சாறு குடிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...