Skip to main content

Spirit Airlines: தனியாகப் பயணித்த 6 வயது குழந்தை; வேறு விமான நிலையத்தில் தரையிறக்கம்... யார் தவறு?

தன் பாட்டியைப் பார்க்க விமானத்தில் பயணித்த 6 வயது குழந்தை, விமான ஊழியர்களின் கவனக்குறைவால் பல மைல்கள் தள்ளித் தரையிறக்கப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

ஃபுளோரிடாவின் ஃபோர்ட் மியர்ஸில் வசித்து வருகிறார் மரியா ரமோஸ். இவரின் பேரன் கேஸ்பர் அவரை சந்திக்க ஸ்பிரிட் ஏர்லைன்ஸில் (Spirit Airlines) பயணித்து இருக்கிறார். பிலடெல்பியாவிலிருந்து தென்மேற்கு ஃபுளோரிடா விமான நிலையத்திற்கு அந்தக் குழந்தை டிராவல் செய்வதாக இருந்தது.

குழந்தை!

ஆனால், குழந்தை தரையிறங்கிய போது அங்கு வரவேற்க யாரும் இல்லை. குழந்தை, ஆர்லாண்டோ விமான நிலையத்தில் தவறுதலாக தரையிறக்கப்பட்டிருந்தது.

ஃபுளோரிடா விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தையின் பாட்டி, தரையிறங்கிய விமானத்தில் குழந்தை இல்லை என்றவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். விமானம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. விமான ஊழியர்களிடம் விசாரிக்கையில், `அப்படி ஒரு குழந்தை விமானத்தில் பயணிக்கவில்லை’ என பதில் கிடைத்திருக்கிறது.

ஆர்லாண்டோவில் தரையிறங்கிய குழந்தை, தன் பாட்டியை அழைத்துள்ளது. அதன்பிறகு தன் பேரனைக் காண ஃபோர்ட் மியர்ஸில் இருந்து கிட்டத்தட்ட 160 மைல்கள் பயணித்து குழந்தையிடம் சென்று சேர்ந்துள்ளார்.

`என் வாழ்விலேயே மிகவும் திகிலூட்டும் அனுபவம்' என மரியா ரமோஸ் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்கிறார்.

அவர் பயணத்திற்கான செலவை விமான நிறுவனம் கொடுக்க முன்வந்தது. இருந்தாலும் தவறு நடந்ததற்கான காரணத்தை அளிக்குமாறு ரமோஸ் கேட்டுள்ளார்.

Spirit Airlines

`குழந்தை எப்போதும் ஒரு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் இருந்தது. ஆனாலும் குழந்தை தவறுதலாக ஆர்லாண்டோவிற்கு பயணித்தது. 

அவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் சேர்க்க உதவினோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறோம். இந்த அனுபவத்திற்காக குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...