Skip to main content

மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை... ஏன் தெரியுமா?!

வாழ்வின் கொடூர நாள்களை கோவிட் மக்களுக்குக் காட்டிவிட்டது. மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை பாரபட்சமில்லாமல் சூறையாடிய கோவிட் முற்றிலும் ஒழிந்த பாடாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் புதிய வேரிய்ன்ட் முளைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அதிகரித்து இருந்தது. அமெரிக்காவைத் தாண்டி பல நாடுகளிலும் இந்த வேரியன்ட்டின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோவிட் 19 பாதிப்புகள் மற்றும் அதன் பரவலை கண்காணிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

covid-19

BA.2.86-ன் வழிதோன்றிய புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அதனை தொடர்ந்து தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வேரியன்ட்களுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, ``தற்போதுள்ள புதிய சப் வேரியன்ட்டுக்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை'' என்று கூறியுள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.

ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.   

காய்ச்சல்

எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம்.

ஆகவே புதிய வேரியன்ட்டிற்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்.கே. அரோரா கூறியுள்ளார்.

கோவிட் தொற்றின் பாதிப்பால் உங்களது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?... கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...