Skip to main content

மீண்டும் பரவும் கோவிட்; தடுப்பூசி தேவையில்லை... ஏன் தெரியுமா?!

வாழ்வின் கொடூர நாள்களை கோவிட் மக்களுக்குக் காட்டிவிட்டது. மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை பாரபட்சமில்லாமல் சூறையாடிய கோவிட் முற்றிலும் ஒழிந்த பாடாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் தாக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. இப்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் புதிய வேரிய்ன்ட் முளைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அதிகரித்து இருந்தது. அமெரிக்காவைத் தாண்டி பல நாடுகளிலும் இந்த வேரியன்ட்டின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள நாடுகள் கோவிட் 19 பாதிப்புகள் மற்றும் அதன் பரவலை கண்காணிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

covid-19

BA.2.86-ன் வழிதோன்றிய புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு இந்தியாவிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அதனை தொடர்ந்து தற்போது அச்சுறுத்தி வரும் புதிய வேரியன்ட்களுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, ``தற்போதுள்ள புதிய சப் வேரியன்ட்டுக்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை'' என்று கூறியுள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.

ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.   

காய்ச்சல்

எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம்.

ஆகவே புதிய வேரியன்ட்டிற்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்.கே. அரோரா கூறியுள்ளார்.

கோவிட் தொற்றின் பாதிப்பால் உங்களது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?... கமென்டில் சொல்லுங்கள்!


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பக்கவாதம் வருமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாகவே எங்கே பார்த்தாலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணம் என்ன.... கொலஸ்ட்ரால் அளவுக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்புண்டா? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஸ்ட்ரோக் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம் Doctor Vikatan: அடிக்கடி வரும் நெஞ்சுவலி... அசிடிட்டி காரணமாகுமா? மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. ஓர் எளிய உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன். மூளை என்பதை உங்கள் வீட்டிலுள்ள மெயின் மின்சார போர்டு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த போர்டு இயங்கவில்லை என்றால், வீட்டில் விளக்குகள் எரியாது, மின்விசிறி சுழலாது. இன்னும் டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என எந்த மின் சாதனமும் இயங்காது. வீடுகளில் 3 ஃபேஸ் மின் சப்ளை இருக்கும். மின்சாரம் தடைப்படும்போது மூன்றில் ஒரு ஃபேஸில் மட்டும் மின்சாரம் வரும். அதனால் குறிப்பிட்ட சில மின்சாதனங்கள் மட்டும் இயங்கும். மூளையின் செயல்பாடும் கிட்ட...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...