Skip to main content

Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி... பெயின் கில்லர் எடுப்பது சரியா?

Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது உடல்வலி, தலைவலி வருகிறதே... அந்த நேரத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது உதவுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

காய்ச்சல் வரும்போது உடல்வலி இருப்பது இயல்புதான். பெரும்பாலான மக்களும் காய்ச்சல் இருப்பதை மருத்துவரிடம் சொல்லாமல், கை, கால் வலி, முதுகுவலி, வயிற்றுவலி, தலைவலி என ஏதோ ஒரு வலியை பிரதானப்படுத்தியே மருந்து கேட்பதைப் பார்க்க முடிகிறது.

மருத்துவர்களை அணுகும்போது, இருமல், சளி, மூக்கடைப்பு இருக்கிறதா என்றுதான் நோயாளிகளிடம் முதலில் கேட்பார்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் சுவாசப்பாதையில் கிருமிகள் இருக்கின்றனவா என்று பார்ப்போம். வயிற்றுவலியோ, வாந்தி, பேதியோ இருப்பதாகச் சொன்னால் குடலில் கிருமிகள் இருக்கலாம் என சந்தேகப்படுவோம். 

சளி

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலோ, அடி வயிற்றில் வலி இருந்தாலோ சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று இருக்கிறதா என பார்ப்போம்.  பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருப்பதாகச் சொன்னால் பிறப்புறுப்பிலோ, கர்ப்பப்பை, சினைப்பை பகுதிகளிலோ கிருமிகள் இருக்கின்றனவா என பார்ப்போம். கை, கால்களில் புண்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து நெறி கட்டி வலியும் காய்ச்சலும் ஏற்பட்டிருக்கலாம்.

ஏற்கெனவே சைக்கிள் ஓட்டுபவராக இருந்து அவருக்கு மூட்டுவலி இருந்தால், காய்ச்சலின்போது அவருக்கு அந்த வலி இன்னும் அதிகமாக இருக்கலாம். காய்ச்சலைக் குறிப்பிடாமல், மூட்டுவலியை  மட்டும் குறிப்பிட்டால், அனுபவமற்ற பெரும்பாலான மருத்துவர்கள் வலி நிவாரணிகளையே பரிந்துரைப்பார்கள். அது காய்ச்சலையும் குணப்படுத்தாது, வயிற்று வலியையும் ஏற்படுத்திவிடும்.

மாத்திரை

எனவே காய்ச்சல் வந்தால் உடல்வலி இருக்கும், ஏற்கெனவே வலி உள்ளவர்களுக்கு அந்தப் பகுதிகளில் வலி இன்னும் சற்று அதிகமாக இருக்கும் என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.  வலியை மட்டுமே பிரதானப்படுத்தி மருத்துவரிடம் சொல்லும்போது நீங்களாகவே வலி நிவாரணிகளைப் பரிந்துரைக்க மருத்துவரை மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். தேவையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது சரியானதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் காய்ச்சல் மருந்தை எடுத்துக்கொண்டாலே சிலமணி நேரத்தில் வலி சரியாவதை உணர்வீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...