Skip to main content

Doctor Vikatan: ஆரோக்கியமான கர்ப்பம்... ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா?

Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா.... ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதில் பெண்ணின் வயது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணின் வயதும் முக்கியமே.

இந்தக் காலத்தில் ஆண்கள், பெண்கள் இருவருமே வேலை, பொருளாதார ரீதியான நிறைவு, வாழ்க்கையில் செட்டிலாவது  என பல காரணங்களுக்காக திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். அதன் விளைவாக குழந்தைப்பேறும் தள்ளிப்போகிறது. பெண்களுக்கு வயதாக, ஆக கருமுட்டைகளின் இருப்பு எப்படி குறைந்துகொண்டே வருமோ, ஆண்களுக்கும் சில விஷயங்களில் பிரச்னை ஏற்படும்.

குழந்தை

அதாவது, வயதாக ஆக, உயிரணுக்களின் தரம் குறையும். விந்தணுக்களின் அளவும் குறையத் தொடங்கும். அது மட்டுமன்றி உயிரணுக்களில் மரபணு ரீதியான திரிபு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக, உருவாகும் கருவானது தரமற்றதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

வயது முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகள் வரலாம். லுகிமியா உள்ளிட்ட புற்றுநோய்கள் தாக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஸ்கீஸோஃபெர்னியா, ஆட்டிசம் போன்ற நரம்பியல் பாதிப்புகளுக்கும் அந்தக் குழந்தை உள்ளாகலாம். குழந்தை உடல் பருமனால் பாதிக்கப்படலாம்.  தாய்க்கு குறைப் பிரசவம் நிகழலாம்.

குழந்தை

எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு, சரியான வயதில் உள்ள ஆணைத் திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்த முடிவாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...