Skip to main content

சீனா: `மாயமாகும் அமைச்சர்கள்... பதவி நீக்கம் செய்யும் அரசு!' - என்னதான் நடக்கிறது அங்கே?

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாகத் திகழ்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன நிலையில், தற்போது அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங். ஏற்கெனவே இதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதும், அவர் பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் திடீரென்று அமைச்சர்கள் காணாமல் போவதும், அவர்கள் பதவி பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது சீன மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்

முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சர்:

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்(Qin Gang) கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து காணாமல் போனார். கடைசியாக ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கின் கேங் அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தென்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்ட பிறகுதான் இப்படியொன்று நிகழ்ந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. ஒரு மாதம் கடந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்தநிலையில்தான், கின் கேங் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார். `மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பிங்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

என்ன காரணம்: தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பொது நிகழ்ச்சிகளில் கின் கேங் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் பரவியது. பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மற்றொரு ரகசியமும் கிசுகிசுத்தது. அதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன் (Fu Xiaotian) என்ற பெண்ணுடன் கின் கேங் ரகசிய உறவில் இருந்ததாகவும், சீன அரசின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அதிகாரப்பூர்வ உத்தரவு என்பதால் அந்த விதியை மீறிய கின் கேங் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.கின் கேங் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன்

தற்போது காணாமல் போன பாதுகாப்புத்துறை அமைச்சர்:

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்கைப் போலவே, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த லி ஷாங்ஃபூவும் காணாமல் போனார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன்பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாததால் தொடர்ந்து லி ஷாங்ஃபூவும் காணாமல் போய்விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஷாங்ஃபூ நீக்கப்பட்டுவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. முறைப்படி ஷாங்ஃபூ நீக்கம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதலுடன் நீக்கப்பட்டிருக்கிறார். தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ

என்ன காரணம்: லி ஷாங்ஃபூ சீனப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து சீனா-அமெரிக்கா இடையேயான ராணுவப் பரிமாற்றங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீனா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தையடுத்து லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. அதபோல, இவர் அமைச்சராக இருந்தபோது சீனா தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதும் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் சீனாவுக்கு வரவிருக்கின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக இருப்பது ஒத்துவராது என்பதால்தான் அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

`நீக்கப்படுவதெல்லாம் சரிதான்... காணாமல் போனவர்களின் கதி என்ன?' என்பதை சீன அரசாங்கமே மறைப்பதுதான் இங்கு புரியாத புதிர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk

``சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி!'' - ஜோ பைடன் விமர்சனம்


http://dlvr.it/Sxyp03

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...