Skip to main content

சீனா: `மாயமாகும் அமைச்சர்கள்... பதவி நீக்கம் செய்யும் அரசு!' - என்னதான் நடக்கிறது அங்கே?

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாகத் திகழ்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன நிலையில், தற்போது அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங். ஏற்கெனவே இதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதும், அவர் பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் திடீரென்று அமைச்சர்கள் காணாமல் போவதும், அவர்கள் பதவி பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது சீன மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்

முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சர்:

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்(Qin Gang) கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து காணாமல் போனார். கடைசியாக ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கின் கேங் அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தென்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்ட பிறகுதான் இப்படியொன்று நிகழ்ந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. ஒரு மாதம் கடந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்தநிலையில்தான், கின் கேங் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார். `மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பிங்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

என்ன காரணம்: தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பொது நிகழ்ச்சிகளில் கின் கேங் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் பரவியது. பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மற்றொரு ரகசியமும் கிசுகிசுத்தது. அதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன் (Fu Xiaotian) என்ற பெண்ணுடன் கின் கேங் ரகசிய உறவில் இருந்ததாகவும், சீன அரசின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அதிகாரப்பூர்வ உத்தரவு என்பதால் அந்த விதியை மீறிய கின் கேங் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.கின் கேங் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன்

தற்போது காணாமல் போன பாதுகாப்புத்துறை அமைச்சர்:

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்கைப் போலவே, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த லி ஷாங்ஃபூவும் காணாமல் போனார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன்பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாததால் தொடர்ந்து லி ஷாங்ஃபூவும் காணாமல் போய்விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஷாங்ஃபூ நீக்கப்பட்டுவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. முறைப்படி ஷாங்ஃபூ நீக்கம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதலுடன் நீக்கப்பட்டிருக்கிறார். தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ

என்ன காரணம்: லி ஷாங்ஃபூ சீனப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து சீனா-அமெரிக்கா இடையேயான ராணுவப் பரிமாற்றங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீனா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தையடுத்து லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. அதபோல, இவர் அமைச்சராக இருந்தபோது சீனா தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதும் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் சீனாவுக்கு வரவிருக்கின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக இருப்பது ஒத்துவராது என்பதால்தான் அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

`நீக்கப்படுவதெல்லாம் சரிதான்... காணாமல் போனவர்களின் கதி என்ன?' என்பதை சீன அரசாங்கமே மறைப்பதுதான் இங்கு புரியாத புதிர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk

``சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி!'' - ஜோ பைடன் விமர்சனம்


http://dlvr.it/Sxyp03

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...