Skip to main content

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது பிரபலங்களிடையே வழக்கம். அதற்காக வொர்க் அவுட் செய்வது, டயட்டில் இருப்பது எனப் பல முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதுண்டு. இன்னும் தாங்கள் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தங்களது உடல் எடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் தொடர் கவனம் செலுத்துவார்கள்.

கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி

ஆனால், இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வொர்க் அவுட் அளவுக்கு மீறிச் செல்லும்போது, அவை பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இப்படி தனது உடல் எடையை அதிகரிப்பதற்காக ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட் செய்த செயல், தற்போது பல நிபுணர்களின் எச்சரிக்கையைப் பெற்று வருகிறது.

2014-ல் வெளியான `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ என்ற மார்வெல் திரைப்படத்தின் மூலம் பெருமளவு கவனம் பெற்றவர், கிறிஸ் பிராட். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தின் உடல் எடையை அதிகரிப்பதற்காக ஒரு நாளில் 100 கிளாஸ் தண்ணீரைக் குடித்து இருக்கிறார்.

மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவரது எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதனைப் பின்பற்றிய கிறிஸ், `` நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக்கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்து வருகின்றனர். 

water

`குறுகிய காலத்தில் அதிக அளவு நீரை அருந்துவது மிகவும் ஆபத்தானது. சிறுநீரகத்தின் கழிவை வெளியேற்றும் திறனை மிஞ்சும் அளவிற்கு அதிகமாக நீங்கள் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்போது, `வாட்டர் இன்டாக்சிகேஷன்' அல்லது `ஹைபோநெட்ரீமியா' என்ற நிலை ஏற்படலாம்.

இது உங்களது ரத்தத்தின் சோடியம் அளவை நீர்த்துப் போகச் செய்கிறது. மேலும் மூளை செல்கள் உட்பட உயிரணுக்களின் வழக்கமான செயல்பாட்டை பாதிக்கலாம்’ என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...