Skip to main content

தீராத வலி; `வயிற்றுக்குள் நட்டு, போல்டு, வயர்கள்...' - மருத்துவர்களுக்கு `அதிர்ச்சி' கொடுத்த நபர்!

பஞ்சாப்பில் வயிற்றுவலி என மருத்துவமனைக்கு வந்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் இறுதியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முன்னதாக, 40 வயது நபர் ஒருவர் காய்ச்சல், கடும் வயிற்றுவலி, குமட்டல் போன்ற காரணங்களால், மோகாவிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோயாளிக்கு வயிற்று வலி மட்டும் குறையாததால், வலிக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்தனர்.

வயிற்றுவலி

பின்னர் எக்ஸ்ரே, ஸ்கேனைப் பார்க்கையில் நோயாளியின் வயிற்றில் பல உலோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து மருத்தவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்த மருத்துவர்களுக்கு, நோயாளின் வயிற்றிலிருந்த பொருள்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் மூன்று மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில், வயிற்றிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டன. அவற்றில், `இயர்போன்கள், வயர், ஊக்கு, ஹேர்க்ளிப்புகள், ராக்கி, செயின், பட்டன்கள், போல்டுகள்' உட்பட பல பொருள்கள் இருந்தன.

பின்னர் இது குறித்துப் பேசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜ்மீர் கல்ரா, ``இது போன்ற பிரச்னையை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இதுவே முதன்முறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபர் வயிற்றுப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். தற்போது அவரின் வயிற்றிலிருந்த அனைத்து பொருள்களும் எடுக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், அவரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. நீண்ட நாள்களாக இந்தப் பொருள்கள் வயிற்றில் இருந்ததால் இத்தகைய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

அறுவை சிகிச்சை (மாதிரிப் படம்)

மேலும், இது குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், ``எங்களுக்கே இது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த பொருள்களையெல்லாம் எப்போது, எதற்காக, எப்படி உட்கொண்டார் என்று தெரியவில்லை" என்று தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...