Skip to main content

`` `டெல்டாகாரன்' எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதைச் செய்ய வேண்டும்!" - பிரேமலதா சொல்வதென்ன?

தஞ்சாவூர், பனகல் கட்டடம் முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.க சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடக அரசையும், பெற்றுத் தராத மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 1968-ம் ஆண்டிலிருந்து காவிரி நதிநீர் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறதே ஒழிய, இதுவரைக்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகள் கடனாளிகளாக மாறியிருக்கும் நிலையைக் காணும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை காலம் ஆட்சி செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்துக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள்... காவிரி நதிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஒற்றுமையாகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமை தமிழக அரசிடம் ஏன் இல்லை?

எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை மனு அளிக்கவிருக்கிறோம். இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். `டெல்டாகாரன்’ எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியைச் சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகம் பாலைவனமாக மாறிவருகிறது. டெல்டாவில் தண்ணீரைச் சேர்த்து வைப்பதற்கு நடவடிக்கை இல்லை.

பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் பிரிந்து இரண்டு நாள்கள்தான் ஆகின்றன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை கிடையாது. இரண்டு தலைவர்களுக்கிடையேதான் பிரச்னை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி தொடர்பான விஷயத்தில் தே.மு.தி.க உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk

`கர்நாடகம் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது' கர்நாடக காவிரி போராட்டத்தின் பின்னணி என்ன?


http://dlvr.it/Swj2zd

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...