Skip to main content

`` `டெல்டாகாரன்' எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதைச் செய்ய வேண்டும்!" - பிரேமலதா சொல்வதென்ன?

தஞ்சாவூர், பனகல் கட்டடம் முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.க சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடக அரசையும், பெற்றுத் தராத மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 1968-ம் ஆண்டிலிருந்து காவிரி நதிநீர் பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருக்கிறதே ஒழிய, இதுவரைக்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகள் கடனாளிகளாக மாறியிருக்கும் நிலையைக் காணும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தனை காலம் ஆட்சி செய்தவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள் தமிழகத்துக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள்... காவிரி நதிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஒற்றுமையாகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமை தமிழக அரசிடம் ஏன் இல்லை?

எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை மனு அளிக்கவிருக்கிறோம். இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். `டெல்டாகாரன்’ எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியைச் சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகம் பாலைவனமாக மாறிவருகிறது. டெல்டாவில் தண்ணீரைச் சேர்த்து வைப்பதற்கு நடவடிக்கை இல்லை.

பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் பிரிந்து இரண்டு நாள்கள்தான் ஆகின்றன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை கிடையாது. இரண்டு தலைவர்களுக்கிடையேதான் பிரச்னை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி தொடர்பான விஷயத்தில் தே.மு.தி.க உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk

`கர்நாடகம் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது' கர்நாடக காவிரி போராட்டத்தின் பின்னணி என்ன?


http://dlvr.it/Swj2zd

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...