Skip to main content

இளைஞர்களைத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்..! சென்னையில் இலவச மருத்துவ முகாம்...!

நம் உடல், மூளையை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறது. மூளையில் இருந்து பெறப்படும் சிக்னலை கொண்டுதான் உடலின் ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்கிறது. அப்படி இருக்க, மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பார்கின்சன்ஸ் நோய்

பார்க்கின்சன் - நோய் பின்னணி

நடு நரம்பு மண்டலத்தின் சிதைவுக் கோளாறையே பார்க்கின்சன் நோய் என்றழைக்கிறோம். உடல் இயங்கவும், அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் டோபமைன் நரம்பியக்கடத்திகள் (Neurotransmitter) முக்கிய பங்காற்றுகின்றன. பார்க்கின்சன் நோயானது, டோபமைன் உருவாக்கத்திற்கு காரணமான மூளையின் ‘சப்ஸ்டான்ஷியா நைக்ரா’-வில் இருக்கும் உயிரணுக்களை அழித்து, டோபமைன் உற்பத்தியைக் குறைக்கிறது.

நோயின் தாக்கம்...

பார்க்கின்சன்ஸ் நோய் குறித்து கேட்டபோது, காவேரி மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology) கூறுகையில், ``பாதிக்கப்பட்டவர்களால் எந்த ஒரு பொருளையும் கையில் சரியாகப் பிடிக்க முடியாது, அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டீ கோப்பைகளைக் கூட கைகளில் எளிதாகப் பிடிக்க முடியாமல் போகும். அடிக்கடி மயக்கம் வரும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும். இதுவரை பார்க்கின்சன்ஸ் நோய்க்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் வழங்கவில்லை என்றாலும், மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளாலும், சுற்றுச்சூழல் மாற்றங்களாலும் இந்நோய் வரலாம்” என்று கூறினார்.

நரம்பியல் நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology)

நோய் அறிகுறிகள்:

பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். உடல் நடுக்கம், அசாதாரண வேகக் குறைபாடு, நிலையற்ற நடை, உடல் பகுதிகளில் விறைப்புத்தன்மை என உடல்ரீதியாக பல அறிகுறிகள் வெளிப்பட்டாலும், மன ரீதியான பிரச்னைகளும் வரலாம் என்கிறது மருத்துவ உலகம்.

சென்னையில் இலவச மருத்துவ முகாம்!

சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) நோய்க்கான இலவச மருத்துவ முகாம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

காவேரி மருத்துவமனை

இந்த இலவச மருத்துவ முகாமில், காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் பங்கேற்று மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். உடலில் நடுக்கம், உடல் உறுப்புகளில் விறைப்புத்தன்மை, கைகள், விரல்கள், கால்களில் வேகக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் காவேரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாமிற்கு வரலாம்.

உடனே 044 - 4000 6000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனைகளில் நடக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்க்கான இலவச மருத்துவ முகாமில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...