Skip to main content

இளைஞர்களைத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்..! சென்னையில் இலவச மருத்துவ முகாம்...!

நம் உடல், மூளையை மையமாகக் கொண்டுதான் இயங்குகிறது. மூளையில் இருந்து பெறப்படும் சிக்னலை கொண்டுதான் உடலின் ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்கிறது. அப்படி இருக்க, மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பார்கின்சன்ஸ் நோய்

பார்க்கின்சன் - நோய் பின்னணி

நடு நரம்பு மண்டலத்தின் சிதைவுக் கோளாறையே பார்க்கின்சன் நோய் என்றழைக்கிறோம். உடல் இயங்கவும், அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் டோபமைன் நரம்பியக்கடத்திகள் (Neurotransmitter) முக்கிய பங்காற்றுகின்றன. பார்க்கின்சன் நோயானது, டோபமைன் உருவாக்கத்திற்கு காரணமான மூளையின் ‘சப்ஸ்டான்ஷியா நைக்ரா’-வில் இருக்கும் உயிரணுக்களை அழித்து, டோபமைன் உற்பத்தியைக் குறைக்கிறது.

நோயின் தாக்கம்...

பார்க்கின்சன்ஸ் நோய் குறித்து கேட்டபோது, காவேரி மருத்துவமனையின் சிறப்பு நரம்பியல் மருத்துவ நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology) கூறுகையில், ``பாதிக்கப்பட்டவர்களால் எந்த ஒரு பொருளையும் கையில் சரியாகப் பிடிக்க முடியாது, அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டீ கோப்பைகளைக் கூட கைகளில் எளிதாகப் பிடிக்க முடியாமல் போகும். அடிக்கடி மயக்கம் வரும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும். இதுவரை பார்க்கின்சன்ஸ் நோய்க்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் வழங்கவில்லை என்றாலும், மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளாலும், சுற்றுச்சூழல் மாற்றங்களாலும் இந்நோய் வரலாம்” என்று கூறினார்.

நரம்பியல் நிபுணர் வெங்கட்ராமன் கார்த்திகேயன் (MD, DNB in Neurology)

நோய் அறிகுறிகள்:

பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். உடல் நடுக்கம், அசாதாரண வேகக் குறைபாடு, நிலையற்ற நடை, உடல் பகுதிகளில் விறைப்புத்தன்மை என உடல்ரீதியாக பல அறிகுறிகள் வெளிப்பட்டாலும், மன ரீதியான பிரச்னைகளும் வரலாம் என்கிறது மருத்துவ உலகம்.

சென்னையில் இலவச மருத்துவ முகாம்!

சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) நோய்க்கான இலவச மருத்துவ முகாம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

காவேரி மருத்துவமனை

இந்த இலவச மருத்துவ முகாமில், காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் பங்கேற்று மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள். உடலில் நடுக்கம், உடல் உறுப்புகளில் விறைப்புத்தன்மை, கைகள், விரல்கள், கால்களில் வேகக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் காவேரி மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாமிற்கு வரலாம்.

உடனே 044 - 4000 6000 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனியில் இருக்கும் காவேரி மருத்துவமனைகளில் நடக்கும் பார்க்கின்சன்ஸ் நோய்க்கான இலவச மருத்துவ முகாமில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...