Skip to main content

`புற்றுநோய்க்கு ஏழே நிமிடங்களில் சிகிச்சை’ - புதிய வரலாறு படைக்கவுள்ள இங்கிலாந்து!

புற்றுநோய் என்ற வார்த்தை தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை யாருக்கு, எப்போது இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்றே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. என்னதான் புற்றுநோய் சாதாரணமானதாக மாறினாலும் அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய்க்கு எளிய சிகிச்சை அளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஊசி

அவர்களின் முயற்சியின் பலனாக, உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) என்ற பொதுச் சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய ஊசியைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த ஊசியை நோயாளிக்குச் செலுத்தினால், அடுத்த 7 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கிவிடும் என அந்நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது.

அவர்கள் இந்த ஊசியை அங்கீகரித்துவிட்டால், இது முதலில் இங்கிலாந்து முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த ஊசியால் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் என்றும் கூறுகின்றனர்.

தற்போது புற்றுநோய்க்கு அடிஸோலிஸுமாப் (Atezolizumab) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது நோயாளிகளுக்கு குளுக்கோஸ் போன்று நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது. இது செயல்பட 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். இதனுடன் ஒப்பிடும்போது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசி, 7 நிமிடங்களிலேயே செயல்படத் தொடங்கிவிடும்.

புற்றுநோய்

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 3,600 பேருக்கு அடிஸோலிஸுமாப் மருந்து அளிக்கப்படுகிறது. தற்போது புற்றுநோய் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதால், இன்னும் பலருக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும், அதுமட்டுமன்றி கீமோதெரபி சிகிச்சைக்குக் கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு உலக மருத்துவத்தில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...