Skip to main content

வடகொரியா தலைநகரில் வெடிகுண்டு விபத்து... கிம் ஜாங் உன்னுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு - என்ன நடந்தது?

வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங் (Pyongyang)-ல் வெடிகுண்டு விபத்து நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் (Kim Jong un)னுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியாகவே கருதப்படுகிறது. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக உலக நாடுகள் கிம் ஜாங் உன்னைச் சாடி வருகின்றனர். இந்த நிலையில் பியோங்யாங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்திருப்பதாக வடகொரிய நாளிதழ் `The Dong-a Ilbo' செய்தி வெளியிட்டிருக்கிறது. பியோங்யாங்கில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னுக்கான பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருக்கிறது. கிம் ஜாங் உன் மேலும், அவர் தன்னுடைய பாதுகாப்பு குறித்து கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய பிரத்யேக வெடிபொருள் கண்டறியும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.  மேலும், அவரின் பாதுகாப்புக் குழுவில் பிரீஃப்கேஸ் பயன்படுத்தும் காவலர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன. வடகொரிய முன்னணி நிபுணரான மைக்கேல் மேடன் (Michael Madden), ``கிம் ஜாங் உன்னைச் சுற்றிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பாலிஸ்டிக் பெட்டிகள் (ballistic briefcases). கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட இவை, குண்டு துளைக்காத தன்மைக்காகப் பெரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் மின்னணு அடிப்படையிலான ஆயுதங்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடப்பதாகக் காவல்துறையினர் கருதினாலோ, துப்பாக்கிச்சூடு நடந்தாலோ இந்தப் பெட்டிகளைக் கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கிம் ஜாங் உன்னைச் சூழ்ந்து பாலிஸ்டிக் பைகளை விரிப்பார்கள். அவர் பாதுகாப்பாக காரில் ஏறும்வரை ஒரு கவசம் போலச் செயல்படுவார்கள். கிம் ஜாங் உன்னுடைய தந்தையான கிம் ஜாங் இல் (Kim Jong-il) பின்பற்றிய பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை, இப்போது கிம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து பெறப்பட்ட ஒன்றுதான் பாலிஸ்டிக் பைகள். அவரின் தந்தை, அவசரக்கால மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.வட கொரியா வல்லுநர்கள் இரண்டு நிகழ்ச்சிகளில் இந்தப் பாதுகாப்பு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். அதாவது, வடகொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிடும்போதும், ஒரு ரிப்பன் வெட்டும் நிகழ்விலும் இந்தச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வடகொரிய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்த ஆண்டு கிம் ஜாங் உன்னின் பொதுமக்கள் சந்திப்பு பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த குண்டு வெடிப்பில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், அந்த நாட்டின் செய்தித்தாளான The Dong-a Ilbo-ல் வெளியான கட்டுரை ஒன்றில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் மோசமான உணவுப் பஞ்சம் மற்றும் பட்டினியால் ஏற்பட்ட கோபத்தால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அந்தச் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvK2L8

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...