Skip to main content

`6.5% கோவிட் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன ஒரு வருடத்திற்குள் இறப்பு’ - ஐசிஎம்ஆர் ஆய்வு

கொரோனா தொற்றுக்குப் பிந்தைய விளைவுகளை அனுபவிக்கும் நோயாளிகளில் 6.5% பேர் மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓராண்டுக்குள் இறந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நெட்ஒர்க்கின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

கோவிட்-19 தொற்று

ஆய்வின் முடிவில், ’நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 60% பாதுகாப்பை வழங்கியது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், இணைநோய் (Comorbidities) பாதிப்பு இருந்தவர்கள் மற்றும் கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஒரு வருடத்திற்குள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை 18-45 வயதுள்ளோருக்கான ஆய்வில் பங்கேற்றவர்களிடமும் காணப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இந்த முடிவுகள், ஆரம்ப கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடையது, கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளான அனைத்து நோயாளிகளுக்கும் இதை பொதுமைப்படுத்த முடியாது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிட்-19 குழுவிற்கான தேசிய மருத்துவப் பதிவேட்டால் நடத்தப்பட்ட இந்த ஆய்வானது, ஒரு வருடத்திற்குப் பிந்தைய டிஸ்சார்ஜ் இறப்பு தொடர்பான காரணிகளை மதிப்பீடு செய்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்

ஐ.சி.எம்.ஆர், கோவிட்-19க்கான தேசிய மருத்துவப் பதிவேட்டை நாடு முழுவதும் 31 மையங்களில் பராமரித்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கோவிட்-19 நோயாளிகளும் டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஒரு வருடம் வரை அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டனர்.

’பிப்ரவரி 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவு, பகுப்பாய்வின்படி, 14,419 பங்கேற்பாளர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது தொடர்பு கொண்டதாகக் கூறினர். மேலும் 942 (6.5%) பேர் பல காரணங்களால் இறந்துவிட்டதாகப் பதிவாகியுள்ளது. கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட பிறகும், அதிக இறப்பு இணை நோய் உள்ள மக்களிடம் ஏன் காணப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்லீரல்அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சிக்கலான கோவிட் -19 பின் விளைவுகளைப் பெற வாய்ப்புள்ளது’ என்று ஆய்வை மேற்கோண்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சிகிச்சை

கோவிட்-19 தொற்றுக்கு அடுத்த ஆண்டில் பதிவான இறப்புகளை விளக்க, பல்வேறு கருதுகோள்கள் பரிசீலிக்கப்பட்டதாக ஆய்வு கூறுகிறது. இந்த மரணங்கள் நீடித்த வீக்கம், வைரஸ் காரணமாக உறுப்பு சேதம், எண்டோடெலியல் செயலிழப்பு உள்ளிட்ட காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...