Skip to main content

Doctor Vikatan: மைதாவில் தயாரிக்கப்படும் பிரெட்டை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பது ஏன்?

Doctor Vikatan: மைதாவில் செய்யப்படுவதால் பிரெட் ஆரோக்கியமற்ற உணவு என்று சொல்கிறார்கள். அதே நேரம் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு அதைப் பரிந்துரைப்பது ஏன்? இதை எப்படிப் புரிந்துகொள்வது? குழந்தைகளுக்கு சாண்ட்விச், பிரெட் ஜாம் கொடுப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

மைதா என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து. அது ரசாயனங்கள் சேர்த்து ப்ளீச் செய்யப்படுகிறது. எனவே மைதா ஆரோக்கியமற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு பிரெட் எளிதில் செரிமானமாகும் என்பதால்தான் அதைக் கொடுக்கச் சொல்வார்கள். இப்போது பெரும்பாலும் பிரெட் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதற்கு பதில் இட்லி அல்லது இடியாப்பம் கொடுக்கச் சொல்கிறார்கள். ஆவியில் வேகவைத்த அவை எளிதில் செரிமானமாகும்.

நம்மில் பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை. இவற்றில்தான் நார்ச்சத்தும், வைட்டமின்கள், தாதுச்சத்துகளும் அதிகம் இருக்கும். இப்போது துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் அதிகரித்திருக்கிறது. அந்த உணவுகளில் பெரும்பாலும் மைதா உணவுகள் இடம் பெறுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் குழந்தைகளுக்குக் கூட மலச்சிக்கல் பிரச்னை சகஜமாகி விட்டது.

சமீபத்திய விளம்பரங்களில் மலச்சிக்கலுக்கான மருந்துகள் அதிகம் இடம்பெறுவதுகூட இதன் பிரதிபலிப்புதான். நார்ச்சத்து குறைவாகவும் மாவுச்சத்து, கொழுப்பு, சர்க்கரை, உப்பு போன்றவற்றை அதிகமாகவும் எடுத்துக்கொள்வதுதான் இந்தப் பிரச்னையைத் தீவிரப்படுத்தும்.

ஜாம் என்பதும் ஆரோக்கிய உணவல்ல. அதில் அளவுக்கு அதிகமான சர்க்கரை, கெமிக்கல்கள், நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால் தொடர்ந்து அதைச் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு குடல் தொடர்பான பிரச்னைகள் வரலாம். செரிமானம் பாதிக்கப்படும். பிரெட், பட்டர், ஜாம், சீஸ், கெட்ச்சப் போன்றவற்றைக் கூடியவரை தவிர்ப்பதே ஆரோக்கியமானது.

ஐஸ்க்ரீம் கேக் சாண்ட்விச்

அந்த வகையில் குழந்தைகளுக்கு பிரெட், ஜாம் அல்லது சாண்ட்விச் கொடுப்பது சரியானதல்ல. என்னதான் சிறுதானிய பிரெட் என்று சொன்னாலும் அதில் நார்ச்சத்து இருக்காது. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி பிரெட், பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. எப்போதாவது கொடுக்கலாம். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு இவற்றைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...