Skip to main content

Doctor Vikatan: டெஸ்ட் எல்லாம் நார்மல்; ஆனாலும் தொடரும் உடல்வலியும் சோர்வும்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எப்போதும் தீராத உடல்வலி இருக்கிறது. வைட்டமின் குறைபாடுகள் எதுவுமில்லை. தைராய்டு, ரத்தப் பரிசோதனை மற்றும் எலும்பு தொடர்பான பரிசோதனைகளையும் செய்து பார்த்து விட்டோம். எதிலும் குறையில்லை, ஆனாலும் உடல்வலியும், சோர்வும் தொடர என்ன காரணம்?

- Saravanan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

ஸ்பூர்த்தி அருண்

அளவுக்கதிக களைப்பும் சோர்வும் உள்ளதாகச் சொல்பவர்களுக்கு முதலில் வைட்டமின் குறைபாடுகள் உள்ளனவா என்று பரிசோதிப்போம். தைராய்டு, அனீமியா உள்ளதா என்று பார்ப்போம். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் நம்மூரில் மிகவும் சகஜம். இதைத் தாண்டி வேறு காரணங்களை யாரும் யோசிப்பதில்லை.

தசைகளில் வலி இருப்பதாக உணர்ந்தால் அந்தத் தசைகள் இறுக்கமாகியிருக்கலாம். உடற்பயிற்சிகள் செய்யும்போது இதுபோன்ற தசை இறுக்கம் நீங்கும். எலும்புகளும் தசைகளும் வலுவடையும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா, ஜங்க் உணவுகள் சாப்பிடுவோர், தான் நன்றாகச் சாப்பிடுவதாகவும் தனக்கு எனர்ஜி நன்றாக இருக்கும் எனவும் நம்புவார்கள். ஆனால் அப்படியில்லை.

தூக்கமின்மை

அடிக்கடி வெளியில் சாப்பிடுவதும் அதிகமான அசைவம் சாப்பிடுவதும் உடலில் ஒருவித மந்தத் தன்மையை ஏற்படுத்தி, களைப்பைக் கொடுக்கும். போதுமான தூக்கம் மிகமிக முக்கியம். ஒருநாள் நன்றாகத் தூங்கவில்லை என்றாலே, அடுத்த நாள் நம் எனர்ஜி வெகுவாகக் குறைவதை உணர முடியும். எல்லோருக்கும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.

ஆனால் பலரும் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் சரியான தூக்கமின்றி இருப்பார்கள். தூக்கக் கடனை சேர்த்துக்கொண்டே போவார்கள். இன்று ஒரு மணி நேரம் குறைவாகத் தூங்கினால், மறுநாள் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கி ஈடுகட்டலாம் என நினைக்கக்கூடாது. இன்னும் சிலர் 10 மணி நேரம்கூட தூங்குவார்கள். ஆனால் அந்தத் தூக்கம் முழுமையாக இல்லாவிட்டால் மனது ஓய்வை உணராது.

ஆழ்ந்த உறக்கம்தான் மனதை அமைதிப்படுத்தும். அடுத்தநாள் வேலைக்குத் தேவையான புத்துணர்வைத் தரும். நம்மில் பலரும் வாரத்தில் 5 நாள்கள் சரியாகத் தூங்கிவிட்டு, வார இறுதியில் வெளியே செல்வது, தாமதமாகச் சாப்பிடுவது, தாமதமாக உறங்குவது என இருப்பார்கள். அது அடுத்து வரப்போகும் வாரத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும். இள வயதில் உடல் ஓரளவு இதைச் சமாளித்துக் கொள்ளும். 40-க்குப் பிறகு சிரமமாகும். 60 ப்ளஸ்ஸில் அதிக பிரச்னைகளைத் தரும்.

அடுத்ததாக மனநலம்... ஸ்ட்ரெஸ், அதன் விளைவாகத் தூக்கமின்மை, கவலை போன்றவை தொடரும் பட்சத்தில் அவற்றின் விளைவுகள் உடல்ரீதியாகவும் வெளிப்படும். சிலருக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளால் ஸ்ட்ரெஸ் வரும்.

ஸ்ட்ரெஸ்

இன்னும் சிலருக்கு எப்போதுமே ஸ்ட்ரெஸ் இருக்கும். அது மனநலனை பாதித்து, உடல் களைப்பு, சோர்வு, தசைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். இதை 'சொமட்டைசேஷன் ஆஃப் மென்ட்டல் ஹெல்த்' ( somatization of mental health) என்போம். அதாவது மனநல பிரச்னைகளால் வரும் உடல்நல பாதிப்புகள்.

எனவே மேற்குறிப்பிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விஷயத்தில் பிரச்னைக்கு என்ன காரணம் என அறிந்து அதைச் சரியாக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...