Skip to main content

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை... கள நிலவரம் என்ன?

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையில் மோரே நகரம் அமைந்திருக்கிறது. அங்கு, சுமார் 3,000 தமிழர்கள் வசித்துவருகிறார்கள். மணிப்பூரில் இரண்டரை மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மோரே பகுதியில் பெரியளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.மணிப்பூரில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும், சமவெளிப்பகுதியில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்கிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் வெடித்தது. அதன் பிறகு, அங்கு இரண்டு முறை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அங்கு, குக்கி பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரண்டாவதாக மைதேயிகளும், மூன்றாவதாக தமிழர்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். தமிழர்களைப் பொறுத்தளவில் குக்கி, மைதேயி ஆகிய இரண்டு இனத்தவருடனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். ஆகவே, தமிழர்களை அவர்கள் விரோதிகளாகப் பார்ப்பதில்லை. கடந்த மே மாதம் வன்முறை வெடித்தபோது, அங்குள்ள மைதேயி இனத்தவரின் வீடுகளையும் கடைகளையும் குக்கி மக்கள் எரித்திருக்கிறார்கள். அந்தத் தாக்குதலில், 10-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகளும் தீயில் எரிந்திருக்கின்றன. ராணுவம் உடனே, தமிழர்களுடன் குக்கி மக்களும் சேர்ந்து அந்தத் தீயை அணைத்திருக்கிறார்கள். அதன் பிறகு, தமிழர்களின் வீடுகளோ, கடைகளோ தாக்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், ஜூலை 16-ம் தேதியன்று மோரே நகரில் தமிழர்களின் வீடுகளும் கடைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோரே கடைவீதியில் குக்கி இனத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள், மைதேயி இனத்தவரின் கடைகளையும், வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். அதில், 30-க்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் தீக்கிரையானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தையடுத்து, மோரே நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர் இது குறித்து மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆரம்பத்தில், மோரே நகரில் 14,000 தமிழர்கள் வசித்தோம். 1995-ம் ஆண்டு குக்கி மக்களுக்கும் தமிழர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு, அங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது, 3,000 தமிழர்கள் இருக்கிறோம். குக்கி, மைதேயி என இரண்டு இனத்தவரிடையேயும் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மோரே என்பது ஒரு மினி இந்தியா மாதிரி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்கள்.தொடரும் `அதிபயங்கரங்கள்' - மணிப்பூர் மக்களுக்காக இதர மாநிலங்களில் ஆதரவுக்குரல் எழவில்லையா?! கடந்த மே 3, 28 ஆகிய இரண்டு நாள்களில் ஏற்பட்ட வன்முறையில், தமிழர்களுக்குச் சொந்தமான 40 வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது, மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால், மோரே நகரில் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வருடன் அமித் ஷா அங்கு கடந்த 60 - 65 வருடங்களாக வசித்துவருகிறோம். எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், தமிழக மக்களும் தமிழக அரசும்தான் எங்களுக்கு உதவ வேண்டும். தற்போது, தமிழர்களுடைய 35 வீடுகள் எரிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு உதவிசெய்ய வேண்டும்” என்றார் வி.சேகர்.
http://dlvr.it/Ssrkvt

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...