Skip to main content

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே நகரில் மீண்டும் வன்முறை... கள நிலவரம் என்ன?

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லையில் மோரே நகரம் அமைந்திருக்கிறது. அங்கு, சுமார் 3,000 தமிழர்கள் வசித்துவருகிறார்கள். மணிப்பூரில் இரண்டரை மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்துவரும் நிலையில், மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், மோரே பகுதியில் பெரியளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.மணிப்பூரில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும், சமவெளிப்பகுதியில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்கிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் வெடித்தது. அதன் பிறகு, அங்கு இரண்டு முறை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அங்கு, குக்கி பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இரண்டாவதாக மைதேயிகளும், மூன்றாவதாக தமிழர்களும் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். தமிழர்களைப் பொறுத்தளவில் குக்கி, மைதேயி ஆகிய இரண்டு இனத்தவருடனும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். ஆகவே, தமிழர்களை அவர்கள் விரோதிகளாகப் பார்ப்பதில்லை. கடந்த மே மாதம் வன்முறை வெடித்தபோது, அங்குள்ள மைதேயி இனத்தவரின் வீடுகளையும் கடைகளையும் குக்கி மக்கள் எரித்திருக்கிறார்கள். அந்தத் தாக்குதலில், 10-க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகளும் தீயில் எரிந்திருக்கின்றன. ராணுவம் உடனே, தமிழர்களுடன் குக்கி மக்களும் சேர்ந்து அந்தத் தீயை அணைத்திருக்கிறார்கள். அதன் பிறகு, தமிழர்களின் வீடுகளோ, கடைகளோ தாக்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், ஜூலை 16-ம் தேதியன்று மோரே நகரில் தமிழர்களின் வீடுகளும் கடைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோரே கடைவீதியில் குக்கி இனத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள், மைதேயி இனத்தவரின் கடைகளையும், வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். அதில், 30-க்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் தீக்கிரையானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தையடுத்து, மோரே நகரம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர் இது குறித்து மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆரம்பத்தில், மோரே நகரில் 14,000 தமிழர்கள் வசித்தோம். 1995-ம் ஆண்டு குக்கி மக்களுக்கும் தமிழர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு, அங்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது, 3,000 தமிழர்கள் இருக்கிறோம். குக்கி, மைதேயி என இரண்டு இனத்தவரிடையேயும் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மோரே என்பது ஒரு மினி இந்தியா மாதிரி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்கள்.தொடரும் `அதிபயங்கரங்கள்' - மணிப்பூர் மக்களுக்காக இதர மாநிலங்களில் ஆதரவுக்குரல் எழவில்லையா?! கடந்த மே 3, 28 ஆகிய இரண்டு நாள்களில் ஏற்பட்ட வன்முறையில், தமிழர்களுக்குச் சொந்தமான 40 வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தற்போது, மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால், மோரே நகரில் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வருடன் அமித் ஷா அங்கு கடந்த 60 - 65 வருடங்களாக வசித்துவருகிறோம். எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், தமிழக மக்களும் தமிழக அரசும்தான் எங்களுக்கு உதவ வேண்டும். தற்போது, தமிழர்களுடைய 35 வீடுகள் எரிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு உதவிசெய்ய வேண்டும்” என்றார் வி.சேகர்.
http://dlvr.it/Ssrkvt

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...