Skip to main content

`மணிப்பூர் குறித்த உண்மையை நாட்டு மக்கள் அறிய வேண்டும்!' - அமித் ஷா

மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தொடரும் இரண்டு குழுவுக்கு மத்தியிலான கலவரம், இந்தியாவைப் பெரும் சஞ்சலத்துக்குள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக மே 4-ம் தேதி இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் குடும்பத்தாரையும் கொலைசெய்த பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கிறது. அது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான பிறகு, அதாவது ஏறத்தாழ 76 நாள்களுக்குப் பிறகு சில குற்றவாளிகளைக் கைதுசெய்திருக்கிறது.I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் கூடியது. அப்போது, கடந்த சில மாதங்களாக 100-க்கும் மேற்பட்டோர் பலியாவதற்குக் காரணமான மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நோட்டீஸ் அளித்தனர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, குறுகிய கால விவாதம் நடத்தும் விதி 176-ன்கீழ் மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள், சபையின் அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும், விதி 267-ன் கீழ் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என ராஜ்ய சபாவில், 27 எம்.பி-க்கள் நோட்டீஸ் சமர்ப்பித்திருக்கின்றனர். இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் ‘I.N.D.I.A’ கூட்டணி எம்.பி-க்கள் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அமித் ஷா மணிப்பூர் கலவரம் குறித்த விவாதம் தொடர்பான கூச்சல் குழப்பத்தால் மட்டுமே, மூன்று முறை சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மணிப்பூர் குறித்து சபையில் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடு உண்மையை அறிந்துகொள்வது அவசியம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஏன் ஒத்துழைக்க மறுக்கின்றன?" எனக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, பிற்பகல் 2:30 மணிக்கு சபை கூடியபோது, இரு தரப்பு எம்.பி-க்களும் மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த விரும்புவதாகக் கூறினாலும், இரு தரப்பினரின் கூச்சல் தொடர்ந்ததால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.`மணிப்பூர் கலவரத்துக்கு பாஜக அரசும் உடந்தை!' - மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ `பகீர்' குற்றச்சாட்டு
http://dlvr.it/SshG27

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...