Skip to main content

Doctor Vikatan: நரயரல நசசநககம (டடகஸ) சயவத சததயம?

Doctor Vikatan: நுரையீரலை டீடாக்ஸ் செய்வது குறித்து நிறைய யூடியூப் வீடியோக்களில் பார்க்கிறோம். வீட்டு சிகிச்சையாக அப்படி நுரையீரலை சுத்தப்படுத்துவது என்பது உண்மையிலேயே சாத்தியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

நுரையீரலில் நச்சுகள் படிவதற்கான காரணங்கள் ஏராளம். உதாரணத்துக்கு புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதன் நச்சுகள் மொத்தமும் நுரையீரலில் படிந்துகொண்டே போகும். சுரங்கங்கள் போன்ற இடங்களிலும், புகை மற்றும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு அந்தச் சூழலில் உள்ள நுண்துகள்கள் நுரையீரலில் படிந்துகொண்டேதான் இருக்கும்.

அப்படி நுரையீரலில் நச்சுகள் படிவதால்தான் சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, ஐஎல்டி எனப்படும் இன்டர்ஸ்டிஷியல் லங் டிசீஸ் பாதிப்பு போன்றவை வருகின்றன. அந்த வகையில் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமான நச்சுப் படிமத்தை சிகிச்சை மூலம் நீக்குவது என்பது சாத்தியமே இல்லை.

வருமுன் காப்பது மட்டுமே இதற்கான தீர்வு. தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆரோக்கியம் குறித்த சில விதிமுறைகள் இருக்கும். என் 95 மாஸ்க் உபயோகிப்பது, இத்தனை மணி நேரம்தான் வேலை பார்க்க வேண்டும், இத்தனை நாள்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

புகைபிடித்தல்

நுரையீரல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சிலிக்கோசிஸ் (Silicosis) மற்றும் ஹைப்பர் சென்சிட்டிவிட்டி நியூமோனைட்டிஸ் (Hypersensitivity pneumonitis) போன்ற பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தெரிகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

அறிகுறிகள் தெரிந்தால் நுரையீரல் திறன் பரிசோதனை

( Pulmonary function tests ) மேற்கொள்ள வேண்டும். நெஞ்சகப் பகுதிக்கான சிடி ஸ்கேன் செய்ய வேண்டும். பாதிப்பு தெரிந்தால் பிரச்னைக்குரிய சூழலில் வேலை பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளவோ, தவிர்க்கவோ வேண்டும்.நுரையீரலில் படிந்த நச்சை நீக்க சரியான தீர்வு இது மட்டும்தான். சாதாரண மக்கள் என்றால் சூழல் மாசு அதிகமுள்ள நேரங்களில் வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கலாம்.

'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' எனப்படும் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளும் வசதி இன்று மொபைல் போனிலேயே இருக்கிறது. குடும்பம் மொத்தமும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் காற்றின் தரக்குறியீட்டைத் தெரிந்துகொண்டு வெளியே செல்வதை, குழந்தைகளை வெளியே விளையாட விடுவதை பற்றியெல்லாம் தீர்மானிக்கலாம். இவையெல்லாம் ஓரளவுக்கு உதவுமே தவிர, தீர்வாகாது.

சென்னை போன்ற நகரங்களில் சூழல் மாசு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அதுவே டெல்லி போன்ற நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் அங்கே வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

மூச்சுப்பயிற்சி

இவை தவிர, யோகா, மூச்சுப்பயிற்சி, சத்தான உணவுப்பழக்கம்... இவைதான் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு அடிப்படையே தவிர, நீங்கள் கேள்விப்படுகிற, யூடியூபில் பார்க்கிற நுரையீரல் டீடாக்ஸிஃபிகேஷன் சிகிச்சைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...