Skip to main content

தரயட... கரணஙகள சகசசகள தவரகக வழகள - மரததவ வளககம!

கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது என விளக்குகிறார் திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அனீஸ்.

Dr. B. Anis. Oncology Dept, M.B.B.S., M.S., M.R.C.S., M.C.H. Kauvery Hospital, Trichy

தைராய்டு கிளாண்ட்

``நமது உடலில் பிட்யூட்டரி கிளாண்ட், அட்ரீனல் கிளாண்ட், கயைணம் என பல எண்டோகிரைன் கிளாண்ட்கள் (Endocrine gland) இருக்கின்றன. அவற்றில் தைராய்டு கிளாண்டும் ஒன்று. இது நமது கழுத்துப்பகுதியில் சுவாசக் குழாய்க்கு மேலேயும், பேச்சுக்குழாய்க்கு கீழேயும் இருக்கும். இது ரைட் லோப், லெஃப்ட் லோப், இஸ்துமஸ் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

தைராய்டு கிளாண்டின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் தொடங்கி, உணவு செரிமானம், இதய செயல்பாடு என மனித உடல் இயக்கத்திற்கு அடிப்படை இந்த தைராக்சின் ஹார்மோன்.

பெண்களுக்கே அதிக பாதிப்பு

தைராய்டு தொடர்பான பாதிப்புகள் ஆண்களைவிட, பெண்களுக்கே அதிக அளவு ஏற்படுகிறது. தைராய்டு கிளாண்டில் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படலாம். முதலாவது, அதன் செயல்திறனில் ஏற்படும் பாதிப்பு. செயல்திறன் பாதிக்கப்பட்டால் ஹார்மோன் சுரப்பு குறையலாம், அல்லது அதிகரிக்கலாம். ஹார்மோன் குறைவாகச் சுரந்தால் அதனை ஹைப்போதைராய்டிசம் என்றும், அதிகமான ஹார்மோன் சுரந்தால் அதை ஹைப்பர்தைராய்டிசம் என்றும் கூறுவார்கள். செயல்திறன் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை மருந்துகள் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

தைராய்டு

பெரும்பாலானோருக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியம். இந்தக் குறைபாட்டை போக்கவே அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாகவே கருத்தரித்த பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடற்சோர்வு, முகம், கை,கால்கள் வீக்கம், மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் ஏற்படுவது ஆகியவற்றை இந்த ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் எனலாம்.

என்ன பாதிப்பு ஏற்படும்?

ஹைப்பர் தைராய்டிச பாதிப்பு ஏற்பட்டால் உடல் எடை குறைவு, கை நடுக்கம், வயிற்றுப்போக்கு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கண் வெள்ளைவிழி இமைகளுக்கு வெளியே வருதல் ஆகிய பிரச்னைகள் எற்படும். இவை தைராய்டு கிளாண்டின் செயல்பாடு பாதிப்பதால் ஏற்படும் விளைவுகள். இரண்டாவது, தைராய்டு பகுதியில் கட்டிகள் ஏற்படலாம். இதனை நாடியுல்ஸ் (Nodule) எனக் கூறுவார்கள். இதில் 85% கட்டிகள் சாதாரண கட்டிகளாக இருக்கும். 15% கேன்சர் கட்டிகளாக இருக்க வாய்ப்புள்ளது. கேன்சர் தவிர்த்த மற்ற கட்டிகள் வர ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

தைராய்டு

கழுத்தில் வீக்கம் அல்லது கட்டியுடன் வந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்தக் கட்டிகள் சிலருக்கு நெஞ்சுக்கூடு வரை கூட நீண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். இவை பெரும்பாலும் வெளியே தெரியாது. 3 சென்டி மீட்டருக்கு மேல் தைராய்டு கட்டி வளர்ந்தால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பு உள்ளது. தைராய்டு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மூன்று முக்கிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில் முதன்மையானது தைராய்டு புரொஃபைல் டெஸ்ட், டி.எஸ்.எஸ், டி3, டி4 என்ற பரிசோதனைகள் மூலமாக தைராய்டு கிளாண்ட் சரியாகச் செயலாற்றுகிறதா என்பது கண்டறியப்படும். இரண்டாவதாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கட்டியின் அளவு, கட்டியின் எண்ணிக்கை, சாதாரண கட்டியா அல்லது கேன்சர் கட்டியா, கேன்சர் கட்டியாக இருந்தால் அருகே உள்ள நெறிக்கட்டிகளுக்கு பரவியிருக்கிறதா என்பது உறுதி செய்யபடும். தைராய்டு கட்டி நெஞ்சுக்கூடு வரை நீண்டிருந்தால் சி.டி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

உணவுப்பழக்கத்தால் கட்டுப்படுத்தலாம்

மூன்றாது பரிசோதனை, அக்கட்டியில் இருந்து ஊசி மூலம் செல்களை எடுத்து அதனை ஆய்வு செய்வார்கள். இதன் மூலம், ஏற்பட்டுள்ள கட்டி கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது கண்டறியப்படும். இந்த மூன்று பரிசோதனைகள், மற்றும் கைகளால் தொட்டுப்பார்த்து கட்டியின் தன்மையைக் கண்டறிந்த பிறகே அது கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது உறுதி செய்யப்படும். சாதாரண கட்டியாக இருந்து, அதன் அளவு 3 சென்டி மீட்டருக்கு கீழே இருந்து, அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. அதைத் தொடர்ந்து கண்காணித்தாலே போதுமானது. உணவுப் பழக்கத்தின் மூலம் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சாதாரண கட்டியாக இருந்து 3 சென்டி மீட்டருக்கு மேல் வளர்ந்து, பிரச்னை ஏற்பட்டால் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

தைராய்டு

கேன்சர் கட்டியாக இருந்தால் கட்டாய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தைராய்டில் ஏற்படும் கட்டி வளர்ந்து, பேச்சுக்குழாயில் நரம்புகளை பாதித்து குரலில் மாற்றம் ஏற்பட்டால் அது கேன்சர் கட்டியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். பாப்பிலாரி கார்சினோமா, ஃபாலிக்யூலர் கார்சினோமா, மெடியுலரி மற்றும் அனபிளாஸ்டிக் என நான்கு வகையான கேன்சர்கள் தைராய்டில் ஏற்படலாம். இதில் 80 சதவிகிதம் கேன்சர் பாப்பிலாரி மற்றும் ஃபாலிக்யூலர் கார்சினோமா பாதிப்பு தான் ஏற்படுகிறது.

அயோடின் சத்து அவசியம்!

பாப்பிலாரி, ஃபாலிக்யூலர் கேன்சர் முறையான அறுவை சிகிச்சை மற்றும் ரேடியோ அயோடின் அபிலேஷன் சிகிச்சை மூலம் 90 சதவிகிதத்திற்கும் மேல் நல்லபடியாக குணப்படுத்த முடியும். மீதமுள்ள கேன்சர்களில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினால் அதனை குணப்படுத்த முடியாது. ஆனால் தைராய்டு கேன்சரில், வேறு உறுப்புகளுக்கு கேன்சர் பரவினாலும் சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

அயோடின் உப்பு

தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். மேலும், தொண்டைப்பகுதியில் கட்டி போல் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு தைராய்டு பிரச்னையைத் தீர்க்கலாம்" என்கிறார் மருத்துவர் அனீஸ்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...