Skip to main content

சர்ச்சையைக் கிளப்பிய `கறுப்பு நிற ஆடைக்குத் தடை' உத்தரவு; யூ டர்ன் அடித்த பெரியார் பல்கலைக்கழகம்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (28.06.2023) பட்டமளிப்பு விழா நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவிருக்கிறார். வள்ளலார் குறித்து சமீபத்தில் ஆளுநர் பேசியதும், தொடர்ச்சியாகப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம் குறித்தும் ஆளுநர் பேசிவரும் கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று பட்டமளிப்பு விழாவுக்காக சேலத்துக்குச் செல்லும் ஆளுநருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கறுப்புக்கொடி காட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் திட்டமிட்டிருக்கின்றன. இதற்காக ‘ஆளுநரின் அத்துமீறல் எதிர்ப்பு கூட்டியக்கம்’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பே உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆளுநர் ஆர்.என்.ரவிசாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் ‘கலகம்’ இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருவோர் கறுப்புச் சட்டை அணிந்துவரக் கூடாது என்றும், கைப்பேசி எடுத்து வரக் கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக யாராவது கறுப்புச் சட்டை அணிந்துவரக்கூடும் என்று காவல்துறை எச்சரித்ததன் அடிப்படையில், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. `பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயே கறுப்புச் சட்டை அணிந்துவரக் கூடாது எனப் பல்கலைக்கழகத்துக்குக் காவல்துறை எப்படி அறிவுறுத்தலாம்... காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது?' என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன், `ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்துவரக் கூடாதென்று சேலம் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை, ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்’ என்று கூறியிருந்தார். இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட்டைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்படாமல் இருக்கலாம் என எங்கும் சொல்லவில்லை. ஆனால், ஆர்.என்.ரவி எங்கு சென்றாலும் சனாதனத்தைப் பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு அரசையும் மதிப்பதே இல்லை. எனவேதான் சேலத்துக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்திருக்கிறோம். இதையடுத்து பட்டமளிப்பு விழாவுக்கு யாருமே கறுப்புச் சட்டையே போட்டு வரக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது ஏற்புடையதல்ல” என்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி இது தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை வட்டாரத்திலும் விசாரித்தோம். ``பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு காவல்துறை இத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை, அவர்களாகவே சுற்றறிக்கை அனுப்பியிருக்கலாம்" என்கின்றனர். ஆனால், ஆளுநர் வருகையையொட்டி வாய்மொழியாக இடப்பட்ட அறிவுரையாக இது இருக்கலாம் என்றும் போலீஸார் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், அந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.பட்டமளிப்பு விழா; ஆளுநர் வருகை - கறுப்பு நிற ஆடை அணிந்து வர தடைவிதித்த `பெரியார்' பல்கலைக்கழகம்!
http://dlvr.it/SrLclt

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...