Skip to main content

"விற்பனையே இல்லாத டாஸ்மாக் கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர்!” - ஆர்.பி.உதயகுமார் தாக்கு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "போதைப்பொருளை ஒழிக்க தமிழகத்தில் காவல்துறை மூலம் பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் செயல்முறையில் பயனளிக்கவில்லை. ராமேஸ்வரத்தில் ஆளும்கட்சிப் பிரமுகர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை மத்திய போதைப்பொருள் கண்காணிப்புப் பிரிவு கண்டுபிடித்தது. ஆனால், அந்த உண்மை வெளியே வரவில்லை.போதைப்பொருள் உலக வர்த்தகத்தில் சட்ட விரோத போதைப்பொருள்கள் விற்பனை ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி என்ற அதிர்ச்சித் தகவல் நமக்கு கிடைக்கிறது. இதனால் புற்றுநோய், பொருளாதர சீரழிவு, குடும்பப் பிரச்னை என சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வில் 100 சதவிகிதம் அரசு தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 20,014 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,721 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்பதற்கு இந்தத் தகவல் சாட்சியாக இருக்கிறது.ஆர்.பி.உதயகுமார் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற, திறமையற்றதாக இந்த அரசு இருக்கிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கிறோம் என்று அரசு கூறுகிறது. எடப்பாடியார் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவால்தான் மூடப்பட்டிருக்கின்றன. அதுவும், விற்பனை இல்லாத கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தல் நடந்திருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவாகும். தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளால் பாதிப்படைந்திருக்கின்றனர். போதை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் பூஜ்ஜியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி அரசின் கஜானாவுக்குச் செல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது.போதைப்பொருள் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர் கைதியாக இருப்பது வரலாற்றில் புதிதாக இருக்கிறது.   இளைய சமுதாயத்தை அரசு காப்பாற்றாது, இளைஞர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் சுனாமி பேரலையாக எழுந்திருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானதுதான். தமிழகத்தில் போதைப்பொருள்கள் அதிகரிக்கும் நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பீகார் சென்றார். இனிமேலாவது மக்களைப் பாதுகாக்கும்  நடவடிக்கையில் முதலமைச்சர்  ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்து போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி இளைஞர்களைப் பாதுகாப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/SrHltt

Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...