Skip to main content

"விற்பனையே இல்லாத டாஸ்மாக் கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர்!” - ஆர்.பி.உதயகுமார் தாக்கு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பாதிப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "போதைப்பொருளை ஒழிக்க தமிழகத்தில் காவல்துறை மூலம் பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் செயல்முறையில் பயனளிக்கவில்லை. ராமேஸ்வரத்தில் ஆளும்கட்சிப் பிரமுகர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை மத்திய போதைப்பொருள் கண்காணிப்புப் பிரிவு கண்டுபிடித்தது. ஆனால், அந்த உண்மை வெளியே வரவில்லை.போதைப்பொருள் உலக வர்த்தகத்தில் சட்ட விரோத போதைப்பொருள்கள் விற்பனை ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடி என்ற அதிர்ச்சித் தகவல் நமக்கு கிடைக்கிறது. இதனால் புற்றுநோய், பொருளாதர சீரழிவு, குடும்பப் பிரச்னை என சர்வதேச அளவில் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வில் 100 சதவிகிதம் அரசு தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 47,248 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 20,014 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,721 நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்பதற்கு இந்தத் தகவல் சாட்சியாக இருக்கிறது.ஆர்.பி.உதயகுமார் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிர்வாகத் திறனற்ற, திறமையற்றதாக இந்த அரசு இருக்கிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கிறோம் என்று அரசு கூறுகிறது. எடப்பாடியார் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவால்தான் மூடப்பட்டிருக்கின்றன. அதுவும், விற்பனை இல்லாத கடைகளைத்தான் மூடியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தல் நடந்திருப்பது தமிழகத்துக்கு தலைகுனிவாகும். தமிழகத்தில் 50 லட்சம் இளைஞர்கள் போதைப்பொருளால் பாதிப்படைந்திருக்கின்றனர். போதை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் பூஜ்ஜியமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி அரசின் கஜானாவுக்குச் செல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது.போதைப்பொருள் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சர் கைதியாக இருப்பது வரலாற்றில் புதிதாக இருக்கிறது.   இளைய சமுதாயத்தை அரசு காப்பாற்றாது, இளைஞர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் சுனாமி பேரலையாக எழுந்திருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானதுதான். தமிழகத்தில் போதைப்பொருள்கள் அதிகரிக்கும் நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பீகார் சென்றார். இனிமேலாவது மக்களைப் பாதுகாக்கும்  நடவடிக்கையில் முதலமைச்சர்  ஈடுபட வேண்டும். அப்படி இல்லையென்றால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்து போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி இளைஞர்களைப் பாதுகாப்பார்" என்று தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/SrHltt

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...