Skip to main content

ஊதவதத சமபரண மழகவதத... வசனயடடகளல இததன ஆபததகள? தரவ தரம மரததவரகள!

'இயற்கையோடு இணைந்து வாழ்' என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்' என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In - Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

Spray

இப்படி நாம் உபயோகப்படுத்தும் வாசனைப் பொருள்களில் சுமார் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாக, உலக நறுமணப் பொருள்கள் சங்கம் (International Fragrance Association) கூறுகிறது. இந்த ரசாயனம் கலந்த நறுமணங்களை நம்மை அறியாமல் நாம் சுவாசிக்கும்போதும், அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி போன்றவற்றில் இருந்து வரும் புகையை சுவாசிக்கும் போதும், உடல்நலம் சார்ந்த பல பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம்.

வீட்டில் பயன்படுத்தும் அறை வாசனையூட்டி, சென்ட், தரை சுத்திகரிப்பான் போன்றவற்றில், ஃபார்மாலடீஹைடு உள்ளது. இது நம் உடல்நலத்திற்கு ஆபத்து என்பதையும் தாண்டி, எளிதில் தீப்பற்றக்கூடியதும் கூட. வாசனை மெழுகுவத்தியில் உள்ள பாரபின், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதுகுறித்து, நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸிடம் கேட்டோம்...

``அறை வாசனையூட்டி, கழிப்பறை வாசனையூட்டி, கொசு விரட்டி, கொசுவத்தி எதுவாக இருந்தாலும் அவற்றை நாம் சுவாசிக்கும் போது அவை நமக்கு தொண்டை, கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் அதிகப்படியான எரிச்சலை ஏற்படுத்தும். காரணம் இவை அனைத்தும் பென்சீன் சம்பந்தப்பட்ட கரிமச் சேர்மங்கள்.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மக்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் சாதாரண இருமல் மற்றும் தும்மலுடன் அவர்கள் கடந்து சென்று விடுவார்கள். அதே சமயம் ஏற்கெனவே ஆஸ்துமா, தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்தினால், நிலைமை சற்று மோசமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸ்

தனிநபர் வாசனையூட்டி மனிதர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வாசனை மெழுகுவத்தி மற்றும் ஊதுபத்தி போன்றவற்றை வீட்டில் வாசனைக்காக சில நேரம் பயன்படுத்துவது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் அதைவிட அதிகமாக நச்சுள்ள காற்றை நாம் பொது இடங்களிலும், தொழிற்சாலை பகுதிகளிலும் சுவாசிக்கிறோம்.

ஆகவே வீட்டில் நல்ல காற்றோட்டத்துடன் மன அமைதிக்காக இவற்றைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயம் தொடர்ந்து பலமணி நேரம் அந்த வாசனையில் இருப்பவர்க்கும் அது தொடர்பாக வேலை செய்பவர்களுக்கும், அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாவிதமான வாசனை பொருள்களும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு" என்றார் மருத்துவர் பிரசன்னகுமார்.

candle

மாற்று இயற்கை வாசனைப் பொருள்கள் மற்றும் அறைத் தெளிப்பான் குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டபோது ``இன்றைய சூழ்நிலையில் நாம் கடைகளில் வாங்கும் பொருள்கள் வேதியியல் ரசாயனங்களால் நிரம்பியுள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது தேவையற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படும். இதைத் தவிர்க்க, இயற்கைப் பொருள்களைத்தேடி நாம் பயணிக்க வேண்டும்.

இயற்கை வாசனை தெளிப்பானுக்கு திருநீற்றுப்பச்சிலையை நீரில் கலந்து பயன்படுத்தலாம். வாசனை மெழுகுவத்திக்கு பதில், நமது பாரம்பர்ய பொருளான இயற்கை சாம்பிராணியைப் பயன்படுத்தலாம். சாம்பிராணி வாங்கும்போது, அதன் தரத்தையும், முழுவதும் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டதா என்பதையும் கவனிப்பது முக்கியம். வாசனை திரவியம் உடல் நலத்தில் பிரச்னையை எற்படுத்தும் என்பதையும் தாண்டி, அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும். இதற்கு பதில், மூலிகைப் பொருளான ஜவ்வாது பயன்படுத்துவது சாலச்சிறந்தது.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்

கொசுவை விரட்ட நாம் கொசுவிரட்டி பயன்படுத்துவதைத் தவிர்த்து, பண்டைய முறையான வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டுக்கு வெளியே புகை போடுவது சிறந்த செயல். கொசுமட்டையையும் பயன்படுத்தலாம்.

இது ரசாயனப் பொருள்களின் காலம் என்றாகிவிட்ட நிலையில் நம் உடல்நலம் நமது கையில்தான் உள்ளது. ஆகவே எதைப் பயன்படுத்துவதற்கு முன்பும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது. மனஅமைதிக்காக என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளாமல் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பொருள்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் விக்ரம் குமார் அறிவுறுத்தினார்.

- அ. விஷ்ணுபிரியா


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...