Skip to main content

ஊதவதத சமபரண மழகவதத... வசனயடடகளல இததன ஆபததகள? தரவ தரம மரததவரகள!

'இயற்கையோடு இணைந்து வாழ்' என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்' என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In - Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

Spray

இப்படி நாம் உபயோகப்படுத்தும் வாசனைப் பொருள்களில் சுமார் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாக, உலக நறுமணப் பொருள்கள் சங்கம் (International Fragrance Association) கூறுகிறது. இந்த ரசாயனம் கலந்த நறுமணங்களை நம்மை அறியாமல் நாம் சுவாசிக்கும்போதும், அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி போன்றவற்றில் இருந்து வரும் புகையை சுவாசிக்கும் போதும், உடல்நலம் சார்ந்த பல பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம்.

வீட்டில் பயன்படுத்தும் அறை வாசனையூட்டி, சென்ட், தரை சுத்திகரிப்பான் போன்றவற்றில், ஃபார்மாலடீஹைடு உள்ளது. இது நம் உடல்நலத்திற்கு ஆபத்து என்பதையும் தாண்டி, எளிதில் தீப்பற்றக்கூடியதும் கூட. வாசனை மெழுகுவத்தியில் உள்ள பாரபின், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதுகுறித்து, நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸிடம் கேட்டோம்...

``அறை வாசனையூட்டி, கழிப்பறை வாசனையூட்டி, கொசு விரட்டி, கொசுவத்தி எதுவாக இருந்தாலும் அவற்றை நாம் சுவாசிக்கும் போது அவை நமக்கு தொண்டை, கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் அதிகப்படியான எரிச்சலை ஏற்படுத்தும். காரணம் இவை அனைத்தும் பென்சீன் சம்பந்தப்பட்ட கரிமச் சேர்மங்கள்.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மக்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் சாதாரண இருமல் மற்றும் தும்மலுடன் அவர்கள் கடந்து சென்று விடுவார்கள். அதே சமயம் ஏற்கெனவே ஆஸ்துமா, தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்தினால், நிலைமை சற்று மோசமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

நுரையீரல் மருத்துவர் பிரசன்னகுமார் தாமஸ்

தனிநபர் வாசனையூட்டி மனிதர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வாசனை மெழுகுவத்தி மற்றும் ஊதுபத்தி போன்றவற்றை வீட்டில் வாசனைக்காக சில நேரம் பயன்படுத்துவது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் அதைவிட அதிகமாக நச்சுள்ள காற்றை நாம் பொது இடங்களிலும், தொழிற்சாலை பகுதிகளிலும் சுவாசிக்கிறோம்.

ஆகவே வீட்டில் நல்ல காற்றோட்டத்துடன் மன அமைதிக்காக இவற்றைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயம் தொடர்ந்து பலமணி நேரம் அந்த வாசனையில் இருப்பவர்க்கும் அது தொடர்பாக வேலை செய்பவர்களுக்கும், அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாவிதமான வாசனை பொருள்களும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்தே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு" என்றார் மருத்துவர் பிரசன்னகுமார்.

candle

மாற்று இயற்கை வாசனைப் பொருள்கள் மற்றும் அறைத் தெளிப்பான் குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமாரிடம் கேட்டபோது ``இன்றைய சூழ்நிலையில் நாம் கடைகளில் வாங்கும் பொருள்கள் வேதியியல் ரசாயனங்களால் நிரம்பியுள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது தேவையற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படும். இதைத் தவிர்க்க, இயற்கைப் பொருள்களைத்தேடி நாம் பயணிக்க வேண்டும்.

இயற்கை வாசனை தெளிப்பானுக்கு திருநீற்றுப்பச்சிலையை நீரில் கலந்து பயன்படுத்தலாம். வாசனை மெழுகுவத்திக்கு பதில், நமது பாரம்பர்ய பொருளான இயற்கை சாம்பிராணியைப் பயன்படுத்தலாம். சாம்பிராணி வாங்கும்போது, அதன் தரத்தையும், முழுவதும் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டதா என்பதையும் கவனிப்பது முக்கியம். வாசனை திரவியம் உடல் நலத்தில் பிரச்னையை எற்படுத்தும் என்பதையும் தாண்டி, அது ஒவ்வாமையையும் ஏற்படுத்தக்கூடும். இதற்கு பதில், மூலிகைப் பொருளான ஜவ்வாது பயன்படுத்துவது சாலச்சிறந்தது.

சித்த மருத்துவர் விக்ரம் குமார்

கொசுவை விரட்ட நாம் கொசுவிரட்டி பயன்படுத்துவதைத் தவிர்த்து, பண்டைய முறையான வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலை போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டுக்கு வெளியே புகை போடுவது சிறந்த செயல். கொசுமட்டையையும் பயன்படுத்தலாம்.

இது ரசாயனப் பொருள்களின் காலம் என்றாகிவிட்ட நிலையில் நம் உடல்நலம் நமது கையில்தான் உள்ளது. ஆகவே எதைப் பயன்படுத்துவதற்கு முன்பும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது. மனஅமைதிக்காக என்று கூறி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளாமல் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பொருள்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்" என்று மருத்துவர் விக்ரம் குமார் அறிவுறுத்தினார்.

- அ. விஷ்ணுபிரியா


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...