Skip to main content

அபபல பரடடன கனசர சனடரல (APCC) கழநதகளககன தவர சகசசபபரவ (PICU) ஆரமபம!

தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே மையமான அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை (PICU) தொடங்கியிருக்கிறது.

நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற அதன் பொறுப்புறுதியை இது மேலும் வலுப்படுத்துகிறது.  குழந்தைகளுக்கான இப்புதிய பிரிவை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்  - ன் குழு, புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி, இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் (குழந்தைகள்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி மற்றும் மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

முழுமையான மற்றும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சையை குழந்தைகளுக்கு வழங்குவது APCC – ன் நோக்கம் என்பதால், PICU – ன் தொடக்கம் இம்மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கிறது.  பல்வேறு துறைகளைச் சேர்ந்த விரிவான மற்றும் சிறப்பான நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவக் குழுவை இப்பிரிவு கொண்டிருக்கிறது. ஒரு திரையில் பல தகவலை வழங்கக்கூடிய மல்டிபாரா மானிட்டர்களோடு இணைந்த நிலை 3 திறனுள்ள,  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. செவிலியர்கள் மற்றும் மருத்துவ துணைப் பணியாளர்களுக்கு இந்த அமைவிடத்திலேயே குழந்தைகளுக்கான மேம்பட்ட உயிர்காப்பு ஆதரவு பயிற்சி திட்டம் (PALS) தொடங்கப்பட்டிருப்பதையும் APCC அறிவித்திருக்கிறது.  இம்மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள், மருத்துவ துணைப் பணியாளர்களோடு பிற கிளினிக்குகளில் பணியாற்றும் குழந்தைகளுக்கான செவிலியர்களும் எந்தவொரு அவசர நிலைகளையும் கையாள அவர்களை இப்பயிற்சி திட்டம் தயார் செய்யும்.

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன் பேசுகையில், “குழந்தைகளுக்காக புற்றுநோய்க்கு மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதில் APCC கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பெரிதும் பாராட்டினார். “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவை தொடங்கும் இவ்விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியாவின் மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் சிகிச்சை வழங்கலில் தமிழ்நாடு மாநிலம் நீண்ட காலமாக கொண்டிருக்கும் தலைமைத்துவ திறனுக்கு இது மற்றுமொரு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சிறார்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான தனது முயற்சிகளில் உயர்நேர்த்தி

கீதா ஜீவன்

நிலையை நோக்கி ஒரு முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையை இப்புதிய பிரிவை தொடங்கியிருப்பதன் மூலம் APCC எடுத்திருக்கிறது.  மிக நேர்த்தியான புரோட்டான் மற்றும் போட்டான் சிகிச்சைகளை வழங்கி இம்மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்காக மனமார பாராட்டுகிறேன்.  குழந்தைகளுக்கான ஒரு முழுமையான சிகிச்சைப் பிரிவை இங்கு நிறுவ சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மீது அதிகளவு முதலீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.  

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ருதி கக்கலாரா கூறியதாவது: “குழந்தைகளுக்கான புற்றுநோயியலில் நவீன தொழில்நுட்பத்தையும், சிகிச்சைகளையும் வழங்குவதில் APCC -ல் பெருமிதம் கொள்வோம்.  மேம்பட்ட உயிர்காப்பு ஆதரவு தொழில்நுட்பம் கண்காணிப்பிற்கான சாதனங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் PICU, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு 24X7 அடிப்படையில் சேவைகளை வழங்கும் குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு எதிரான யுத்தத்தில் இப்புதிய பிரிவு, புரட்சிகர மாற்றத்தை சாத்தியமாக்கும்  இச்சிறப்பான தேவையை எமது நோயாளிகளுக்கு இதன்மூலம் வழங்க முடியும் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. PICU வழியாக  குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் பிற புரோட்டான் சிகிச்சைகளை வழங்கும் பிற மையங்களிலிருந்து  நாங்கள் வேறுபட்டு, தனிச்சிறப்போடு செயலாற்றுவோம்.” 

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் இரத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரம்யா உப்புலூரி, இத்தொடக்க விழா நிகழ்வில் கூறியதாவது: “உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குவதில் PICUs இன்றியமையா பங்காற்றுகின்றன.  குழந்தை நோயாளிகளின் தனித்துவமான தேவைகளுக்கு தீர்வளிக்க பல்வேறு துறைகளில், சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு குழு, இப்புதிய பிரிவில் பணியாற்றும்.  மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்ப சாதனங்களும் இங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  குழந்தை நோயாளிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு சாதனங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள், மருத்துவ  நிபுணர்களுக்கு பெரிதும் உதவும்.  சிக்கலான மருத்துவ நிலைகளில் உள்ள குழந்தைகளுக்கு விரிவான, மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதை செவிலியர்கள், குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய குழு உறுதிசெய்யும்.” 

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழு புற்றுநோயியல் & இன்டர்நேஷனல் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி இந்நிகழ்வில் பேசுகையில், “சாத்தியமுள்ள மிக உயர்ந்த சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்க APCC – ல் நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்.  குழந்தைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் நுட்பமான, சிரமமான செயல்முறையாகும்.  புற்றுநோய்க்கான சிகிச்சையை வழங்குவதோடு நிறுத்திவிடாமல், குழந்தைகளுக்கான பிரத்யேக தீவிர சிகிச்சைப்பிரிவை தொடங்கியிருப்பது நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளை வழங்குவதற்கு எங்களுக்கு உதவும்.  மிக நவீன உட்கட்டமைப்பு வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் நிறுவி, இந்தியாவிலும் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிக நேர்த்தியான சிகிச்சையை வழங்குவதே அப்போலோவில் எங்களது இலக்காக இருக்கிறது.  குழந்தைகளுக்கு மிக விரிவான, முழுமையான  சிகிச்சையை வழங்குவதற்கு குழந்தைகளுக்கான முதன்மையான சிறப்பு மருத்துவர்கள் குழுவுடனும் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுடனும் இணைந்து ஒத்துழைப்புடனும் செயல்பட நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்.” என்று கூறினார்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளால் உருவாக்கப்பட்ட அற்புதமான கலைப்படைப்பை இந்த புதிய PICU பிரிவு கொண்டிருக்கிறது.  “ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமிப்பிரியா டேனியல் அவர்களின் கற்பனாத்திறனால் “நம்பிக்கையின் ஹீரோக்கள்”  (‘Heroes of Hope’) என்ற கருப்பொருளின் கீழ் அழகாக வடிவமைக்கப்பட்ட கலைப்படைப்பிற்கு மாணவிகள் உயிரோட்டத்தை தந்திருக்கின்றன.  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு தொடக்க நிகழ்வின்போது மாண்புமிகு அமைச்சர் திருமதி. கீதா ஜீவன் இக்கலைப்படைப்பை திறந்து வைத்தார்.

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓவியம் உட்பட, கலைப்படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினார்.  அவர் பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப்படைப்புகளை உருவாக்க இதுவொரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும்.  நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமாக தேவைப்படும் நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கி அவர்கள் மனதை அமைதிப்படுத்தும் சிறப்பான திறன் கலைக்கு இருக்கிறது.  குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவில் கலைப்படைப்புகளை இடம்பெறச் செய்வதன் மூலம் நோயாளிகளின் உணர்வுரீதியான நலத்தை பேணி வளர்க்கும் ஒரு நல்ல சூழலை நம்மால் உருவாக்க முடியும்.  நோயாளிகள் மனதில் நேர்மறை உணர்வை இது பதிய வைப்பதோடு, நோய் பாதிப்பிலிருந்து, மீண்டு குணமடைகின்ற அவர்களது ஒட்டுமொத்த செயல்முறையையும் கலை நிச்சயமாக மேம்படுத்தும்.” என்று குறிப்பிட்டார். 

புற்றுநோய் சிகிச்சையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சையை வழங்குவதற்காக இந்த மிக நவீன பிரிவினை நிறுவியிருப்பதன் வழியாக தனது சேவையின் பரப்பை அப்போலோ கேன்சர் சென்டர் மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...