Skip to main content

ச.ட எம.ஆர.ஐ ஸகனகக மறறகம AI தழலநடபம? சநதரபசச கரதத: மரததவ வளககம

சமீபகாலமாக ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அது குறித்து பல குழப்பங்களும், அது வேலையிழப்புக்கு காரணமாகுமோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும் என்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் என்றும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.

சுந்தர்பிச்சை

கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோயைக் கண்டறிய முடியும் என்றார். கூகுள் லென்ஸ் மூலம் நம்முடைய விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலம் இது சாத்தியம் என்று தெரிவித்திருந்தார்.

அதே போல் கூகுள் லென்ஸ் மூலம் ஒருவரின் வயது, அவர் புகைப்பழக்கம் உள்ளவரா.... எதிர்காலத்தில் அவருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையும் கண்டறியலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு, சுந்தர்பிச்சை தெரிவித்திருந்தார்.

இதெல்லாம் எந்தளவு சாத்தியம் என்று சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜிடம் பேசினோம்...

``இதய நோயைக் கண்டறிவதற்காக பல ஆண்டுகளாக இசிஜி பயன்படுத்தி வருகிறோம் தற்போது ஏஐ உதவியுடன் இசிஜி செயல்படத் தொடங்கியுள்ளது. நுண்ணறிவின் மூலம் அறிக்கை பெற முடிவதால், நோயாளிக்கு தாமதமின்றி சிகிச்சை கொடுக்க முடிகிறது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இதயம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா... நோய்வாய்ப்பட்டிருக்கிறதா என்றுதான் கணிக்க முடியுமே தவிர, என்ன நோய் என்று தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாது.

புனர்வாழ்வு & வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் | சேலம்

சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றிலும் இதேநிலை தான். தற்போதிருக்கும் சூழ்நிலையில் மருத்துவருக்கும், மருத்துவக் கருவிகளுக்கும் ஏஐ தொழில்நுட்பம் உதவியாக இருக்குமே தவிர, மருத்துவக் கருவிகளுக்கு மாற்றாக விளங்க முடியாது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, மருத்துவத்தில் அதன் பங்களிப்பு ஆரம்பகட்டத்தில் உள்ளது. மருத்துவத்துறையில் ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அதற்கேற்றவாறு தரவுகளுடன் ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். இதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும்" என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...