Skip to main content

3 வயத கழநதயன நககல பரசன... ஆணறபபல அறவ சகசச சயத மரததவமன: உரமம ரதத!

நாக்கில் பிரச்னை என மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 வயது சிறுவனுக்கு, ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (circumcision surgery) செய்த மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை

உத்தரப்பிரதேச மாநிலம், பிரேலி மாவட்டத்தில் உள்ள எம் கான் மருத்துவமனைக்கு (M Khan Hospital), மூன்று வயதுக் குழந்தையை சிகிச்சைக்கு ஜூன் 23 அன்று கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, அங்குள்ள மருத்துவர்கள் குழந்தைக்கு ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சையைச் செய்துள்ளனர்.

இதனை அறிந்த உறவினர்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பல இந்துத்துவ அமைப்புகள், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரேலி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்குக்கு உத்தரவிட்டார்.

புகார் சரியானது என கண்டறியப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், அந்த மருத்துவமனையின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்யவும், முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

சிகிச்சை

இதனிடையே டாக்டர்கள் குழு ஒன்று, மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தியது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களின் வாக்குமூலமும், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலமும் சேகரிக்கப்பட்டன. 

மருத்துவமனையின் அனைத்து ஆவணங்களும் கஸ்டடியில் எடுக்கப்பட்டதோடு, மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...