Skip to main content

Dhoni: கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராஃப்; ரசிகர்களுக்கு கிஃப்ட்; சேப்பபாக்கில் நெகிழ்ந்த தோனி!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி வென்றிருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடும் கடைசி லீக் போட்டி இதுதான் என்பதால் போட்டி முடிந்த பிறகு கொஞ்சம் ஸ்பெசலான விஷயங்களெல்லாம் நடந்திருந்தது.
தோனி

போட்டி முடிந்த பிறகு தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறும் விழா முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டமிடப்பட்டதை போலவே போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவெல்லாம் முடிந்த பிறகு தோனி தனது வீரர்களுடன் ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து மைதானத்திற்குள் என்ட்ரி கொடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
இதற்கிடையில் மைதானம் முழுவதும் `எல்லோருக்கும் நன்றி', (Yellowrukkum Nandri) `மீண்டும் சந்திப்போம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளெல்லாம் வைக்கப்பட்டிருந்தது. `எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி...' போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை சிஎஸ்கே வீரர்களே ஏந்தியும் வந்தனர்.
CSK

முட்டி வலியால் அவதியுறும் தோனி காலில் ஒரு கட்டுடன் நடந்து வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார். மேலும், ரசிகர்களுக்கு சில பரிசுப்பொருள்களையும் வழங்கினார். `Yellowrukm Thanks' என எழுதப்பட்டிருந்த மஞ்சள் டீ சர்ட் மற்றும் தோனியின் ஆட்டோகிராப் போடப்பட்ட ஒரு டென்னீஸ் பந்தையும் தோனியிடம் பரிசாக பெற்ற ரசிகர்கள் குதூகலித்து கொண்டாடினர்.

CSK

இதுபோக, `நாங்கள் அடித்த பெரிய பெரிய சிக்சர்களைவிட உங்களின் அன்பு பெரிது' என வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு அட்டையில் தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் அத்தனை பேரும் ஆட்டோகிராப் போட்டிருந்த ஒரு கார்டும் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

Thanks Card

தோனி & கோ மைதானத்தைச் சுற்றி வந்த சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேரலையில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கரும் தோனியும் நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.

திடீரென கவாஸ்கர் தனது சட்டையில் தோனியை ஆட்டோகிராப் போடச் சொல்ல தோனியும் மகிழ்ச்சியோடு ஆட்டோகிராப் வழங்கிவிட்டு மீண்டும் ரசிகர்களை நோக்கி நகர்ந்தார்.
Dhoni - Gavaskar

`சச்சினுக்கு மும்பையில் மட்டும்தான் ரசிகர்கள் உண்டு. கோலிக்கு பெங்களூருவில் மட்டும்தான் ரசிகர்கள் உண்டு. ஆனால், தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.' என முன்பொரு சமயத்தில் கவாஸ்கர் தோனியைப் புகழ்ந்ததுதான் இந்த சமயத்தில் ஞாபகம் வந்தது.

'மீண்டும் சந்திப்போம்' என்கிற வாசகத்தையும் மைதானம் முழுவதும் பார்க்க முடிந்தது. இது சிஎஸ்கே சொல்லும் செய்தியா? இல்லை தோனி சொல்லும் செய்தியா?

தோனி அடுத்த சீசனிலும் சேப்பாக்கத்திற்கு வீரராகவே மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருவாரா? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...