Skip to main content

புதுப்புது மோசடிகள்... மக்களே உஷார்!

முன்பெல்லாம் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து திருடுவதுதான் வழக்கம். ஆனால், செல்போன், ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்று வந்த பிறகு, நம்மை அறியாமலேயே நம் பாக்கெட்டுக்குள்ளும் வங்கிக் கணக்குக்குள்ளும் இருக்கும் பணத்தைக் கொள்ளை அடிக்கும் வேலைகள் பக்காவாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மோசடிகளில் வலியப்போய் சதிவேலையில் சிக்கி பெரும் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்!

அண்மையில் நடந்த பல சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புனேவில் பன்னாட்டு பொறியியல் நிறுவனத்தின் துணை மேலாளர் ஒருவருக்கு வந்த குறுஞ்செய்தியில், ‘‘நாங்கள் அனுப்பும் வீடியோக்களை நீங்கள் ‘லைக்’ செய்தால் போதும், ஒரு ‘லைக்’குக்கு ரூ.50 கிடைக்கும்’’ என்று இருந்துள்ளது. அதை அவர், ‘க்ளிக்’ செய்து ‘லைக்’ செய்ய ஆரம்பிக்க, உடனே அவருக்குப் பணம் வரத் தொடங்கியது. ‘‘மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டுமெனில், இந்த அக்கவுன்டில் பணம் கட்டுங்கள்; உங்களுக்கு இருமடங்காகக் கிடைக்கும்’’ என்று, குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் தகவல் அனுப்ப, இந்தத் துணை மேலாளரும் அவர்களுக்குப் பணம் அனுப்பி இரு மடங்காகப் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், கடைசியாக அவர் அனுப்பிய ரூ.40 லட்சம் பணம் திரும்ப வரவே இல்லை.

இதே போல, சென்னையில் 30-க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் க்ரைம் போலீஸுக்கு வந்துள்ளன. ‘‘ரூ.100 தந்தால், ரூ.150 உங்களுக்குக் கிடைக்கும்’’ என டெலிகிராம் என்னும் குறுஞ்செய்தித் தளத்தில் ஒரு விளம்பரம் வர, ‘ரூ.100-தானே...’’ என்று சிலர் அனுப்பினார்கள். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் கணக்கில் ரூ.150 வந்தது. அடுத்து ரூ.1,000 அனுப்ப, ரூ.1,500 வந்தது. கடைசியில் ரூ.30 லட்சத்தை அனுப்பிவிட்டு, ரூ.45 லட்சம் திரும்ப வரும் எனக் காத்திருந்தவருக்கு எந்தப் பணமும் வரவில்லை. இப்படி 30 பேர் ரூ.5 கோடி வரை பணத்தை இழந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எழுத்தறிவு இல்லாத ஏழைகள் அல்ல. நன்கு படித்தவர்கள். ரூ.30 லட்சத்தை இழந்தவர் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் இன்ஜினீயர். ரூ.1.2 கோடி இழந்தவர் ஒரு தொழில்முனைவோர்.

அளவுக்கு அதிகமாக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி குறுஞ்செய்திகளை அனுப்புவதுதான் மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையாக இருக்கிறது. ‘வீட்டில் உட்கார்ந்தபடியே பணத்தை அள்ளலாம் போல இருக்கே!’ என்று நினைத்து, இந்த வலையில் வலியச்சென்று விழுந்துவிட்டு, பிற்பாடு ‘பணம் பறிபோச்சே’ என்று புலம்புவதுதான் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. ஒருவர் நமக்கு ஏன் அதிக லாபம் தர வேண்டும், பகுதி நேர வேலையில் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்விகளை எல்லாம் கேட்காமலே, பணத்தைப் போட்டுவிட்டு, பிற்பாடு ‘நான் அப்பாவி, தெரியாமல் பணம் போட்டு விட்டேன்’ என்று புலம்புவதில் என்ன பயன்?

எதுவும் நமக்கு சும்மா கிடைக்காது; அப்படிக் கிடைக்கும் என்று சொன்னால், அது நம்மை ஏமாற்றுவதற்குப் போடும் தூண்டில் என்பதை உணர்ந்து, கவனமாக நடந்துகொண்டால் மட்டுமே இது மாதிரியான மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். பேராசையால் இனியும் பணத்தை இழக்காதீர்கள் மக்களே!

- ஆசிரியர்


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...