Skip to main content

DMK: பி.டி.ஆர் ஆடியோ லீக்ஸ்... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?!

2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் பல தரப்பினரின் நன்மதிப்பை தி.மு.க அரசு பெற்றிருக்கிறது. கருணாநிதியைவிட சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்கிற பாராட்டை முதல்வர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். ஆனால், சமீபகாலமாக சில சறுக்கல்களையும் தடுமாற்றங்களையும் தி.மு.க அரசு சந்தித்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதியளிக்கும் அரசாணை போன்ற நடவடிக்கைகளால் தி.மு.க அரசின் செல்வாக்கு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. `எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்... தி.மு.க ஆட்சி மலர வேண்டும்' என்று சமூக வலைதளங்களிலும் பொதுமேடைகளிலும் யார் யாரெல்லாம் சட்டமன்றத் தேர்தலின்போது, குரல் கொடுத்தார்களோ, அவர்களே கண்டிக்கிற அளவுக்கு தி.மு.க அரசின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பி.டி.ஆர் குறித்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாயை முறைகேடாகச் சேர்த்திருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் ஆடியோ க்ளிப், தி.மு.க தலைமைக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதற்கடுத்து, மற்றொரு ஆடியோ க்ளிப் ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்துவருகிறேன். பா.ஜ.க-விடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா. ஆனால், இங்கு எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும்தான் எடுக்கிறார்கள். நிதி மேலாண்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா... அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்.

அதனால் எட்டு மாதங்கள் பார்த்த பிறகு முடிவுசெய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்த அனைத்தும் அவர்களுக்கே எதிர்வினையாகத் திருப்பியடிக்கும். எப்படி சொல்வது... நான் இந்த யுத்தத்தை சீக்கிரமாகக் கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அந்தக் குரல் பேசுகிறது. அதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்று அண்ணாமலை கூறுகிறார்.

உதயநிதி

இது தன்னுடைய குரல் அல்ல என்று மறுக்கும் பி.டி.ஆர்., நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற போலி காணொளிகளை எளிதாக உருவாக்க முடியும் என்று அறிக்கை வெளியிட்டுவருகிறார்.

தன் அரசு பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் தனது ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் ஒருவர் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசியிருப்பதாக வெளியாகியிருக்கும் ஆடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார். அதேபோல, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருகன் சபரீசனும் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.

ஸ்டாலின்

ஆமாம் என்றாலும் பிரச்னை... இல்லை என்றாலும் பிரச்னை. அதனால்தான், மௌனமாகக் கடந்துவிடலாம் என்று முதல்வர் நினைக்கலாம். ஆனால், இது அவ்வாறு கடந்துபோகிற விவகாரம் அல்ல. ஆகவேதான், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆடியோ க்ளிப் இரண்டு பாகங்களுடன் நின்றுவிடும் என்று தெரியவில்லை. அண்ணாமலை அடுத்து வெளியிடக்கூடிய ஆடியோவில் இன்னும் சீரியஸான விவகாரங்கள் பேசப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். அப்போதும் தி.மு.க தலைமை மௌனத்தையே கடைப்பிடிக்குமா?

இந்த விவகாரத்தை பா.ஜ.க-வினர் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. ஏற்கெனவே, இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டிருக்கிறார்கள். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஆளுநரிடம் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை, இது குறித்து ஆளுநர் ஒரு சீரியஸான முடிவை எடுக்கிறார் என்கிற பட்சத்தில், குறைந்தபட்சம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டிய அழுத்தம் அப்போது தி.மு.க-வுக்கு நிச்சயம் ஏற்படும்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...