Skip to main content

DMK: பி.டி.ஆர் ஆடியோ லீக்ஸ்... மௌனம் கலைக்குமா திமுக தலைமை?!

2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் மூலம் பல தரப்பினரின் நன்மதிப்பை தி.மு.க அரசு பெற்றிருக்கிறது. கருணாநிதியைவிட சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்கிற பாராட்டை முதல்வர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார். ஆனால், சமீபகாலமாக சில சறுக்கல்களையும் தடுமாற்றங்களையும் தி.மு.க அரசு சந்தித்துவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதியளிக்கும் அரசாணை போன்ற நடவடிக்கைகளால் தி.மு.க அரசின் செல்வாக்கு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது. `எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்... தி.மு.க ஆட்சி மலர வேண்டும்' என்று சமூக வலைதளங்களிலும் பொதுமேடைகளிலும் யார் யாரெல்லாம் சட்டமன்றத் தேர்தலின்போது, குரல் கொடுத்தார்களோ, அவர்களே கண்டிக்கிற அளவுக்கு தி.மு.க அரசின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பி.டி.ஆர் குறித்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வரின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாயை முறைகேடாகச் சேர்த்திருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் ஆடியோ க்ளிப், தி.மு.க தலைமைக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

அதற்கடுத்து, மற்றொரு ஆடியோ க்ளிப் ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவு அளித்துவருகிறேன். பா.ஜ.க-விடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா. ஆனால், இங்கு எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும்தான் எடுக்கிறார்கள். நிதி மேலாண்மை செய்வது சுலபம். இது ஒரு அமைப்பா... அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்.

அதனால் எட்டு மாதங்கள் பார்த்த பிறகு முடிவுசெய்துவிட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால், இந்த குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்த அனைத்தும் அவர்களுக்கே எதிர்வினையாகத் திருப்பியடிக்கும். எப்படி சொல்வது... நான் இந்த யுத்தத்தை சீக்கிரமாகக் கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என்று கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அந்தக் குரல் பேசுகிறது. அதை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்று அண்ணாமலை கூறுகிறார்.

உதயநிதி

இது தன்னுடைய குரல் அல்ல என்று மறுக்கும் பி.டி.ஆர்., நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற போலி காணொளிகளை எளிதாக உருவாக்க முடியும் என்று அறிக்கை வெளியிட்டுவருகிறார்.

தன் அரசு பற்றியும் தன் குடும்பத்தினர் பற்றியும் தனது ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் ஒருவர் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசியிருப்பதாக வெளியாகியிருக்கும் ஆடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார். அதேபோல, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் உதயநிதியும், முதல்வரின் மருகன் சபரீசனும் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை.

ஸ்டாலின்

ஆமாம் என்றாலும் பிரச்னை... இல்லை என்றாலும் பிரச்னை. அதனால்தான், மௌனமாகக் கடந்துவிடலாம் என்று முதல்வர் நினைக்கலாம். ஆனால், இது அவ்வாறு கடந்துபோகிற விவகாரம் அல்ல. ஆகவேதான், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆடியோ க்ளிப் இரண்டு பாகங்களுடன் நின்றுவிடும் என்று தெரியவில்லை. அண்ணாமலை அடுத்து வெளியிடக்கூடிய ஆடியோவில் இன்னும் சீரியஸான விவகாரங்கள் பேசப்பட்டிருக்கக்கூடும் என்கிறார்கள். அப்போதும் தி.மு.க தலைமை மௌனத்தையே கடைப்பிடிக்குமா?

இந்த விவகாரத்தை பா.ஜ.க-வினர் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. ஏற்கெனவே, இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டிருக்கிறார்கள். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் ஆளுநரிடம் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை, இது குறித்து ஆளுநர் ஒரு சீரியஸான முடிவை எடுக்கிறார் என்கிற பட்சத்தில், குறைந்தபட்சம் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டிய அழுத்தம் அப்போது தி.மு.க-வுக்கு நிச்சயம் ஏற்படும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...