Skip to main content

Doctor Vikatan: சமீப காலமாக பிரபலமாகி வரும் நட் பட்டர்... சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: சாதாரண வெண்ணெய் பற்றிதான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது சமீப காலமாக நட் பட்டர் என ஒன்று பிரபலமாகி வருகிறதே. அதில் புரதச்சத்து அதிகம் என்பதால் சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானது என்கிறார்களே, அது உண்மையா? இந்த நட் பட்டரை தினமும் சேர்த்துக் கொள்ளலாமா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்படும் பீநட் பட்டர், பாதாமிலிருந்து எடுக்கப்படும் ஆல்மண்ட் பட்டர், வால்நட்டிலிருந்து எடுக்கப்படும் வால்நட் பட்டர், முந்திரியிலிருந்து எடுக்கப்படும் கேஷ்யூ பட்டர், ரோஸ்ட்டடு பீநட் பட்டர், உப்பு சேர்க்காத அன்சால்ட்டடு பட்டர்..... இப்படி இன்று விதம்விதமான நட் பட்டர் வகைகள் கிடைக்கின்றன.

இவற்றில் புரதச்சத்து அதிகம் என்பதில் சந்தேகமில்லை. இந்த வகை நட் பட்டரையெல்லாம் பிரெட், சப்பாத்தி போன்றவற்றில் தடவி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் ஒரு டேபிள்ஸ்பூன் நட் பட்டரில் 16 கிராம் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும்.

இந்த வகை பட்டரில் சர்க்கரையும், சோடியமும் அதிகம் சேர்த்துத் தயாரிக்கப்படும். ஒரு சர்விங் எனப்படும் 15 கிராம் பட்டரில் 100 மில்லிகிராம் சோடியம் இருப்பதாகத் தெரிகிறது.

ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்றவற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரும் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குழந்தைகள் உட்பட யாருமே சோடியம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

எனவே புரதத் தேவைக்காக மட்டும் இந்த நட் பட்டர் வகைகளைப் பயன்படுத்துவது சரியல்ல. கொழுப்பும் சர்க்கரைச் சத்தும் மறைமுகமாக உடலில் சேர்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதுதான் உண்மை.

Peanut butter

எனவே நட் பட்டரையும் அளவோடு சேர்த்துக்கொள்ளும்போது பாதிப்பில்லை. தினமும் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும். வாரத்துக்கு எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பது ஒருவரது உடல் எடை, அவர்களது உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்பவரா என்பதையெல்லாம் பொறுத்து தீர்மானிக்கப்பட வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...