Skip to main content

``சித்த மருத்துவத்தை தமிழ் ஆயுர்வேதம் என்று கூறும்போது வேதனையாக உள்ளது!" - மருத்துவர் கு.சிவராமன்

பல நூற்றாண்டுகளைக் கடந்து சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதுதான். சித்த மருத்துவத்தின் பயனை கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்தார்கள். உலக அளவில் கபசுரக்குடிநீரின் அருமை தெரியவந்தது.

மருத்துவர் கு.சிவராமன்

சித்த மருத்துவத்தின் நன்மைகளை இன்னும் உலகம் முழுவதும் பரப்புவதற்கு அதன் தேவைகளையும், தேடல்களையும் பற்றி சித்த மருத்துவர்கள் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சித்த மருத்துவர்களை ஒரே சமூகமாக கொண்டுவர மதுரை 'மடீட்சியா' (Madurai District Tiny and Small Scale Industries Association) தளம் அமைத்துக் கொடுதது.

சமீபத்தில் மதுரையில் மடீட்சியா நடத்திய 'தற்கால சித்த மருத்துவ ஆய்வுப்பாதை' எனும் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

`மடீட்சியா’ தலைவர் எம்.எஸ்.சம்பத் தொடக்க உரையாற்றினார். மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ``கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. கபசுரக்குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறி அதை பயன்படுத்த வலியுறுத்தியதால் பலருக்கு நிவாரணம் கிடைத்தது.

சித்த மருத்துவ ஆய்வு நிகழ்ச்சி

இதன் பலனை மக்கள் அறிந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் பக்கங்களிலும் சித்த மருத்துவமும் இடம்பெற்றது. ஆனால் சித்த மருத்துவத்தை `தமிழ் ஆயுர்வேதம்’ என்று கூறும்போது மனவேதனையாக உள்ளது. சித்த மருத்துவத்தின் காலம் மிக தொன்மையானது.’’ என்றார்.

சு.வெங்கடேசன் எம்.பி பேசும்போது, ``இந்தாண்டு பட்ஜெட்டில் ஆயூஷ் துறைக்கு ஒதுக்கீடு ரூ.3640 கோடி. இதில் சித்த மருத்துவத்திற்கான ஒதுக்கீடு வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே. அது சம்பளம் மற்றும் அலுவலகச் செயல்பாட்டிற்கே சரியாகிவிடும். ஆனால், ஆயுர்வேத ஆய்வுக்கு சுமார் ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

சு.வெங்கடேசன்

நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், `கொரோனா பேரிடர் மேலாண்மையில் கபசுரக்குடிநீரை இணைத்தபோது விமர்சனங்களை வைத்தவர்கள், இப்போதும் சித்த மருத்துவத்தின் மீது கேள்விகள் வைத்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத்துவர்  சத்யராஜேஸ்வரன் தன் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்’ என்றனர்.

தஞ்சை சித்த மருத்துவர் விஜய் விக்ரமன், புதுச்சேரி மண்டல ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மருத்துவர் சத்தியாராஜேஸ்வரன், மருத்துவர் தமிழ்க்கனி, மருத்துவர் ஜெயரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஆ


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...