Skip to main content

``சித்த மருத்துவத்தை தமிழ் ஆயுர்வேதம் என்று கூறும்போது வேதனையாக உள்ளது!" - மருத்துவர் கு.சிவராமன்

பல நூற்றாண்டுகளைக் கடந்து சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருப்பதுதான். சித்த மருத்துவத்தின் பயனை கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்தார்கள். உலக அளவில் கபசுரக்குடிநீரின் அருமை தெரியவந்தது.

மருத்துவர் கு.சிவராமன்

சித்த மருத்துவத்தின் நன்மைகளை இன்னும் உலகம் முழுவதும் பரப்புவதற்கு அதன் தேவைகளையும், தேடல்களையும் பற்றி சித்த மருத்துவர்கள் தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு சித்த மருத்துவர்களை ஒரே சமூகமாக கொண்டுவர மதுரை 'மடீட்சியா' (Madurai District Tiny and Small Scale Industries Association) தளம் அமைத்துக் கொடுதது.

சமீபத்தில் மதுரையில் மடீட்சியா நடத்திய 'தற்கால சித்த மருத்துவ ஆய்வுப்பாதை' எனும் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

`மடீட்சியா’ தலைவர் எம்.எஸ்.சம்பத் தொடக்க உரையாற்றினார். மருத்துவர் கு.சிவராமன் பேசும்போது, ``கொரோனா காலத்தில் சித்த மருத்துவர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. கபசுரக்குடிநீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறி அதை பயன்படுத்த வலியுறுத்தியதால் பலருக்கு நிவாரணம் கிடைத்தது.

சித்த மருத்துவ ஆய்வு நிகழ்ச்சி

இதன் பலனை மக்கள் அறிந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் பக்கங்களிலும் சித்த மருத்துவமும் இடம்பெற்றது. ஆனால் சித்த மருத்துவத்தை `தமிழ் ஆயுர்வேதம்’ என்று கூறும்போது மனவேதனையாக உள்ளது. சித்த மருத்துவத்தின் காலம் மிக தொன்மையானது.’’ என்றார்.

சு.வெங்கடேசன் எம்.பி பேசும்போது, ``இந்தாண்டு பட்ஜெட்டில் ஆயூஷ் துறைக்கு ஒதுக்கீடு ரூ.3640 கோடி. இதில் சித்த மருத்துவத்திற்கான ஒதுக்கீடு வெறும் 90 கோடி ரூபாய் மட்டுமே. அது சம்பளம் மற்றும் அலுவலகச் செயல்பாட்டிற்கே சரியாகிவிடும். ஆனால், ஆயுர்வேத ஆய்வுக்கு சுமார் ரூ. 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

சு.வெங்கடேசன்

நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், `கொரோனா பேரிடர் மேலாண்மையில் கபசுரக்குடிநீரை இணைத்தபோது விமர்சனங்களை வைத்தவர்கள், இப்போதும் சித்த மருத்துவத்தின் மீது கேள்விகள் வைத்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத்துவர்  சத்யராஜேஸ்வரன் தன் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார்’ என்றனர்.

தஞ்சை சித்த மருத்துவர் விஜய் விக்ரமன், புதுச்சேரி மண்டல ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மருத்துவர் சத்தியாராஜேஸ்வரன், மருத்துவர் தமிழ்க்கனி, மருத்துவர் ஜெயரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஆ


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...