Skip to main content

Doctor Vikatan: டூ வீலர் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு?

Doctor Vikatan: நான் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறேன். வயது 38. தினமும் 80 முதல் 100 கிலோமீட்டர் தூரம் பைக் ஓட்டுகிறேன். எனக்கு கடந்த ஆறு மாதங்களாக கடுமையான முதுகுவலி இருக்கிறது. டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்ப்பதுதான் வழியா? முதுகுவலிக்கு வேறு தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை

டூ வீலர் ஓட்டுவது என்பது முதுகுவலிக்கு முக்கியமான ஒரு காரணம்தான். பலரும் தினமும் 50- 60 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள். இதைத் தவிர்ப்பது என்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கலாம். டூ வீலர் ஓட்டுவோருக்கு முதுகுவலி வருகிறது என்றால் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்களது பாஸ்ச்சர் எனப்படும் தோற்றப் பாங்கு.

இன்று டூ வீலர்களில் விதம் விதமான மாடல்கள் வருகின்றன. ஃபேன்சி பைக்குகளை ஓட்ட விரும்பும் மனநிலை அதிகரித்திருக்கிறது. 20 வயதில் இருக்கும் ஓர் இளைஞருக்கு அப்படிப்பட்ட பைக்கை ஓட்டுவது சிரமமாக இல்லாமல் இருக்கலாம். அதுவே வயதானவர்களுக்கு அப்படிப்பட்ட டூ வீலர்களை ஓட்டுவது நிச்சயம் பாஸ்ச்சரை பாதித்து, அதன் தொடர்ச்சியாக முதுகுவலியைத் தரும்.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பைக் முதலில் சரிசெய்யப்பட வேண்டும். உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறதா, ஓட்டும்போது அசௌகர்யமாக உணரச் செய்யாமல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்து டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், உங்கள் முதுகுப் பகுதியை உறுதியாக்கும் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டு, தொடர்ந்து செய்து வர வேண்டும். தினமும் இந்தப் பயிற்சிகளை காலையில் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வீடு திரும்பியதும் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்த பிறகுதான் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

முதுகுவலி

பல வருடங்களாக டூ வீலர் ஓட்டுபவர், முதுகுப் பகுதியிலுள்ள எலும்பு தேய்ந்திருக்கிறது, வலியும் அதிகமிருக்கிறது என்ற நிலையில், அவர்களை வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். வேலையிடத்துக்குப் பக்கத்திலேயே குடியிருப்பது அல்லது வீட்டின் அருகே வேலை என ஏதேனும் ஒரு மாற்றத்தைச் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்றால் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...