Skip to main content

Doctor Vikatan: டூ வீலர் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு?

Doctor Vikatan: நான் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறேன். வயது 38. தினமும் 80 முதல் 100 கிலோமீட்டர் தூரம் பைக் ஓட்டுகிறேன். எனக்கு கடந்த ஆறு மாதங்களாக கடுமையான முதுகுவலி இருக்கிறது. டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்ப்பதுதான் வழியா? முதுகுவலிக்கு வேறு தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை

டூ வீலர் ஓட்டுவது என்பது முதுகுவலிக்கு முக்கியமான ஒரு காரணம்தான். பலரும் தினமும் 50- 60 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள். இதைத் தவிர்ப்பது என்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கலாம். டூ வீலர் ஓட்டுவோருக்கு முதுகுவலி வருகிறது என்றால் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்களது பாஸ்ச்சர் எனப்படும் தோற்றப் பாங்கு.

இன்று டூ வீலர்களில் விதம் விதமான மாடல்கள் வருகின்றன. ஃபேன்சி பைக்குகளை ஓட்ட விரும்பும் மனநிலை அதிகரித்திருக்கிறது. 20 வயதில் இருக்கும் ஓர் இளைஞருக்கு அப்படிப்பட்ட பைக்கை ஓட்டுவது சிரமமாக இல்லாமல் இருக்கலாம். அதுவே வயதானவர்களுக்கு அப்படிப்பட்ட டூ வீலர்களை ஓட்டுவது நிச்சயம் பாஸ்ச்சரை பாதித்து, அதன் தொடர்ச்சியாக முதுகுவலியைத் தரும்.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பைக் முதலில் சரிசெய்யப்பட வேண்டும். உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறதா, ஓட்டும்போது அசௌகர்யமாக உணரச் செய்யாமல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்து டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், உங்கள் முதுகுப் பகுதியை உறுதியாக்கும் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டு, தொடர்ந்து செய்து வர வேண்டும். தினமும் இந்தப் பயிற்சிகளை காலையில் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வீடு திரும்பியதும் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்த பிறகுதான் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

முதுகுவலி

பல வருடங்களாக டூ வீலர் ஓட்டுபவர், முதுகுப் பகுதியிலுள்ள எலும்பு தேய்ந்திருக்கிறது, வலியும் அதிகமிருக்கிறது என்ற நிலையில், அவர்களை வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். வேலையிடத்துக்குப் பக்கத்திலேயே குடியிருப்பது அல்லது வீட்டின் அருகே வேலை என ஏதேனும் ஒரு மாற்றத்தைச் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்றால் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...