Skip to main content

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா வெண்புள்ளி பிரச்னை?

Doctor Vikatan: என் தோழிக்கு வெண்புள்ளி பாதிப்பு இருக்கிறது. அவளின் பிள்ளைகளுக்கு இந்த பாதிப்பு இல்லை. ஆனாலும் பேரன், பேத்திகளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுகிறாள். இன்னமும் அவளைப் பார்க்கும் பலரும் இந்த பாதிப்பு தொட்டால் ஒட்டிக்கொண்டு விடுமோ என சற்று விலகி நின்றே பேசுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. வெண்புள்ளி பாதிப்பு குழந்தைகளுக்கும் வருமா? இதை குணப்படுத்தவே முடியாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா | சென்னை

விட்டிலிகோ அல்லது வெண்புள்ளி பாதிப்பு என்பது ஒருவகையான ஆட்டோஇம்யூன் குறைபாடு. அதாவது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பாற்றலே நமக்கு எதிராக மாறுவது. அந்த வகையில் விட்டிலிகோ விஷயத்திலும், நம் உடலின் வெள்ளை அணுக்களே, சருமத்துக்கு நிறம் கொடுக்கும் நிறமிகளைச் சிதைத்துவிடுகிறது.

நமது சருமத்துக்கு நிறம் கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகள் குறிப்பிட்ட இடத்தில் செயலிழந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். விட்டிலிகோ பாதித்தவர்களுக்கு சருமம், பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். பிரவுன் நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் இல்லாததுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம்.

இந்த பாதிப்பு உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அல்லது உடல் முழுவதும் என எப்படி வேண்டுமானாலும் வரலாம். சிலருக்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பேட்ச் போல வரலாம். பாதிப்பு எப்படிப் பரவுகிறது என்பதைப் பொறுத்து அதை வகைப்படுத்துவோம்.

பொதுவாக இந்த பாதிப்பை 20 முதல் 30 வயதில் கண்டுபிடிக்கிறோம். அரிதாக குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரலாம். குழந்தைகளுக்கு வரும்போது நோயை கணிப்பது சற்று சுலபம். பெரியவர்களுக்கு அதிலும் பரவலாக வரும்போது அது சற்று கடினம். உதடுகளில், விரல் நுனிகளில், கால்களில், அந்தரங்க உறுப்பு முனைகளில் வரும் வெண்புள்ளி பாதிப்பை கணிப்பது சற்று சிரமம்.

தாத்தா, பாடடிக்கோ, பெற்றோரில் யாருக்காவதோ இந்த பாதிப்பு இருந்தால் பிள்ளைகளுக்கு வர 10 முதல் 15 சதவிகிதம் வாய்ப்புகள் உண்டு. தைராய்டு, புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், சில வகை மருந்துகளின் விளைவு என இதற்கு வேறு காரணங்களும் உண்டு. பாதிப்பின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்துதான் சிகிச்சை முடிவு செய்யப்படும். சிறிய அளவிலான பேட்ச் போன்ற பாதிப்புகளுக்கு க்ரீம் மூலமே தீர்வு காணலாம். உடல் முழுவதும் பரவுகிறது என்ற நிலையில் சில பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

வெண்புள்ளி

நம் எதிர்ப்பு சக்திக்கும் சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகளுக்கும் நடக்கும் போராட்டத்தைக் குறைக்கும்வகையில் கார்ட்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மாத்திரைகள், க்ரீம்களை தாண்டி லைட் தெரபியும் தீர்வாகப் பரிந்துரைக்கப்படும். லேசர் சிகிச்சைகளும் உதவலாம். இவை தவிர அறுவை சிகிச்சையும் ஒரு தீர்வு. அதாவது இரண்டு வருடங்களாக விட்டிலிகோ பரவியிருக்கக்கூடாது, அளவு பெரிதாகியிருக்கக்கூடாது. அப்படியிருந்தால் வேறோர் இடத்திலிருந்து மெலனினை கொண்டுவந்து பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தி அறுவை சிகிச்சை செய்யலாம்.

வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. தொட்டால் ஒட்டிக்கொள்ளாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றபடி எந்த உறுப்பையும் பாதிக்காது. எந்த இடத்தில் நிற மாற்றம் ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் உள்ள முடியும் வெள்ளையாக மாற வாய்ப்புண்டு. மற்றபடி இது பயப்படும்படியான பிரச்னை இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...