Skip to main content

தனித்து களம் காணும் தேமுதிக... ஈரோடு கிழக்கு கணக்கு தான் என்ன?!

2021 சட்டமன்ற தேர்தலின் போது சீட் கொடுப்பதில் அதிமுக-வுடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியது. இதேபோல், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து களம் கண்டது. தற்போதைய அரசியலில் தனித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தே.மு.திக, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை மாற்றி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச்சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4-ம் தேதி காலமானார். அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த கையோடு அங்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல்

தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோல, அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை பிரச்னையால் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க உடன் கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.க-வும் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தச்சூழலில், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே சுதீஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மா.செ கூட்டம்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும். ஈரோடு கிழக்கில் மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்" என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க படுதோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இடைத்தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ள தே.மு.தி.கவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்,

ஆனந்த்

``மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தே.மு.தி.க இருக்கிறது. 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் வெற்றிபெற்றோம். அதே நம்பிக்கையுடன் தான் இப்போதும் களம் காண்கிறோம். தே.மு.தி.க தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு அமையும். ஓருரி நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி அறிவிக்கப்படும். பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் நேரடி பிரசாரத்திற்குச் செல்வார்கள். விஜயகாந்த் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வாரா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் சொல்வோம்" என்கின்றனர்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...