Skip to main content

`அம்ரித் உத்யான்’: குடியரசுத் தலைவர் மாளிகையில் பெயர் மாற்றப்பட்ட முகலாய தோட்டத்தின் வரலாறு என்ன?!

பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு ஊர்கள், இடங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டெல்லியிலும், உத்தரப் பிரதேசத்திலும் பெயர் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. டெல்லியில் நேதாஜி சிலை முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு ‘ராஜபாதை’ என்று பெயர். கடந்த 75 ஆண்டுகளாக ராஜபாதை என்று அழைக்கப்பட்டுவந்த அந்த சாலையின் பெயர், சமீபத்தில் ‘கர்த்தவ்ய பாத்’ என்று மாற்றப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை

உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தின் பெயரை ‘பிரயக்ராஜ்’ என்று யோகி ஆதித்யநாத் அரசு மாற்றியது. அதேபோல, உ.பி-யில் உள்ள முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீன்தயாள் முகேபாத்யாய் என்று மாற்றப்பட்டது. ஃபைசாபாத் பெயரும் மாற்றப்பட்டது.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்திருக்கும் பிரமாண்டமான தோட்டம், ‘முகலாய தோட்டம்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. தற்போது, ‘அம்ரித் உத்யான்’ என்று அது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாய தோட்டத்துக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர்சூட்டியிருக்கிறார் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

முகலாய தோட்டம்

இந்தியாவின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றியது ஆங்கிலேய அரசு. மிகப்பெரிய கட்டங்களைக் கட்டி, புது டெல்லியை உருவாக்கினார்கள். அங்கு, வைஸ்ராய் மாளிகையை உருவாக்குவதற்கு 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த மாளிகையின் பின்புறத்தில் மிகப்பெரிய தோட்டம் அமைக்கப்பட்டது. அதுதான் முகலாய தோட்டம்.

முதலில், பிரிட்டிஷ் பாரம்பர்யத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வடிவமைப்புடன் அந்தத் தோட்டத்தை உருவாக்க நினைத்தனர். அப்போது, முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்ற யோசனையை அன்றைக்கு வைஸ்ராயாக இருந்தவரின் மனைவியான லேடி ஹார்டிங்கே தெரிவித்திருக்கிறார்.

ராஜாஜி

‘முகலாயர்களின் தோட்டங்கள்’ என்ற புத்தகத்தை வாசித்து பிரமித்துப்போன லேடி ஹார்டிங்கே, லாகூர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் முகலாயர் தோட்டங்களுக்கும் சென்றிருக்கிறார். அது ஏற்படுத்திய தாக்கத்தால்தான், முகலாயர் பாணியில் தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

1917-ம் ஆண்டிலேயே தோட்டத்துக்கான வரைபடம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், 1928, 1929-ம் ஆண்டில்தான் செடிகள் நடப்பட்டு, தோட்டம் உருவாக்கப்பட்டது. அங்கு அமைந்திருக்கும் ரோஜா தோட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தோட்டக்கலைத்துறை இயக்குநராக இருந்த வில்லியம் முஸ்டோ, ரோஜா செடிகளை வளர்ப்பதில் நிபுணர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 வகையான ரோஜா செடி வகைகளைக் கொண்டுவந்து ரோஜா தோட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார்.

அப்துல்கலாம்

அடோரா, மிருணாளினி, தாஜ்மகால், ஈஃபில் டவர், ஒக்லஹாமா, பிளாக் லேடி, புளூ மூன், லேடி எக்ஸ் உள்பட பிரபலமான பல ரோஜா செடி வகைகள் அங்கு இருக்கின்றன. அன்னை தெரசா, ராஜாராம் மோகன்ராய், ஆப்ரஹாம் லிங்கன், ஜவகர்லால் நேரு, ராணி எலிசபெத் உள்பட பல ஆளுமைகளின் பெயர்களும் ரோஜாக்களுக்கு சூட்டப்பட்டிருக்கின்றன. துலிப்ஸ், ஹெலிகோனியா போன்ற மலர்கள் 1998-ல் அங்கு அறிமுகம் செய்யப்பட்டன.

பல்வேறு காலக்கட்டங்களில் குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள், இந்தத் தோட்டம் சிறப்புற தங்கள் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள். டாக்டர் ஜாகீர் உசேன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, புதிய வகை ரோஜாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, முகலாய தோட்டத்தில் அமைந்திருக்கும் ரோஜா தோட்டத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கப்பட்டது.

திரௌபதி முர்மு

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனராலாக ராஜாஜி இருந்தபோது, நாட்டில் உணவுப்பஞ்சம் நிலவியது. அப்போது, முகலாய தோட்டத்தின் ஒரு பகுதியை உணவுதானியங்களைப் பயிரிடுவதற்காக அவர் ஒதுக்கினார். அந்தப் பகுதியில் தானே உழுது, உணவுதானியங்களைப் பயிரிட்டார். அந்தப் பகுதியில் தற்போது பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அந்த காய்கறிகள், குடியரசுத்தலைவர் மாளிகையில் வசிப்பவர்களுக்கு உணவாகின்றன.

முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு கள்ளிச்செடிகள் பிடித்தமானவை. அவரின் காலத்தில், முகலாய தோட்டத்தில் கள்ளித் தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. குடியரசுத்தலைவராக ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இருந்தபோது, இசைத்தோட்டம், ஆன்மித்தோட்டம் உருவாக்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகை வரலாற்றில் ‘முகல் கார்டன்’ என்று பிரபலமாக அறியப்பட்ட அந்தத் தோட்டம் இனிமேல், `அம்ரித் உத்யான்’ என்று அழைக்கப்படும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...