Skip to main content

ஒன் பை டூ

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``அ.தி.மு.க என்ற கட்சியில் நடக்கும் அவலங்களை `நறுக்’கென்று ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறார் உதயநிதி. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தங்களின் நாற்காலி ஆசைக்கு அந்த இயக்கத்தை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக டெல்லிக்கு அடிவருடியானவர்கள், எதிர்க்கட்சியான பிறகு தாங்கள் செய்த ஊழலை மறைக்க ஒன்றிய அரசுக்கு அடிமைச் சேவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனானப்பட்ட வாஜ்பாய், அத்வானி தொடங்கி இன்றைய பிரதமர் மோடி வரைக்கும் கூட்டணி விவகாரங்களைப் பேச அம்மையார் ஜெயலலிதாவின் வீட்டுக் கதவு திறக்காதா என்று போயஸ் கார்டனில் காத்திருந்த காட்சியைத்தான் தமிழ்நாடு பார்த்திருக்கிறது. ஆனால் இன்று, கமலாலயம் வாசலில், `நான்... நீ...’ என்று போட்டி போட்டுக்கொண்டு காத்துக்கிடக்கிறார் கள் அ.தி.மு.க-வினர். ஒரு கவுன்சிலரைக்கூட ஜெயிக்க வைக்க வக்கில்லாத அண்ணாமலை என்ற அரைவேக்காடு நபரிடம் ஓர் இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரி இவர்கள் நிற்பதைப் பார்க்கும்போது, ‘நக்கிக் குடிப்பார் அதையும் நல்லதென்று சொல்லுவார்’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.’’

செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

``கோபாலபுரத்தின் கொத்தடிமைக் கூட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அ.தி.மு.க குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது... தி.மு.க கூட்டத்தை மக்கள் பத்து வருடங்கள் மூலையில் உட்காரவைத்தும் இன்னும் அவர்கள் திருந்தவில்லை. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘பழம் கனிந்துகொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்’ எனக் கருணாநிதி சொன்னதும்... விஜயகாந்த் வீட்டுக்குத் தூது மேல் தூது அனுப்பி, பேச்சுவார்த்தை நடத்தியதும்... தே.மு.தி.க-வுடன் கூட்டணிவைக்க தி.மு.க-வினர் கடைசிவரை காத்துக்கிடந்த கதையும் உதயநிதிக்குத் தெரியாதுபோல. அவர் இன்னும் சினிமா உலகத்திலிருந்து வெளியில் வரவில்லை. கைதட்டல் வாங்க வேண்டுமென யாரோ எழுதிக்கொடுத்ததை மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். தாத்தா, அப்பா, மகன் என வம்சாவளியில் குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள், ஜனநாயகக் கட்சியான அ.தி.மு.க-வைக் குறைகூறுவது நகைப்புக்குரியது. தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு, பட்டத்து இளவரசன் உதயநிதியை அமைச்சர் ஆக்கியது மட்டுமே ஸ்டாலின் அரசின் ஒரே சாதனை. இந்த கொடுங்கோல் ஆட்சி மீதான மக்களின் கோபம், ஈரோடு இடைத்தேர்தலில் வெளிப்படும்.’’


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...