Skip to main content

உக்ரைன் போர்: "நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால்; 24 மணி நேரத்தில்..!'' - டொனால்டு ட்ரம்ப்

2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, ட்ரம்ப் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பை விதைப்பதாகக் கூறி, அவரின் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகிவருகிறார். அமெரிக்காவின், கொலம்பியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், உக்ரைன் - ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் நிறுத்தியிருப்பேன். சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் போர் நடக்காமல் செய்திருப்பேன்.ரஷ்யா - உக்ரைன் போர் தற்போதும் பேச்சுவார்த்தையின் மூலம் போரை நிறுத்த முடியும். ஆனால், இங்கு அதைச் செய்ய யாரும் இல்லை. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பலவீனத்தாலும், திறனற்ற ஆட்சியாலும் நாம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அவர் நம்மை மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டார். நான் அதிபரானால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் செய்து காட்டுவேன்" என்றார். கடந்த வாரம், டொனால்டு ட்ரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்குக் கோரிக்கை வைக்கும்விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதில், "ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவாருங்கள்... அதை விட்டுவிட்டு, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதால், போர் அடுத்தகட்டத்துக்குத்தான் செல்லும்" என்று பதிவிட்டிருந்தார். அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் `ட்ரம்ப் சுவரை' கடக்க முயன்ற குஜராத் நபர் பலி; போலீஸ் விசாரணை!
http://dlvr.it/Shj9V8

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...