Skip to main content

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்?

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே... அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே... கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னை

சீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல் உதிர்வுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பரைத் தன்மை, ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஏற்படக்கூடிய வழுக்கைப் பிரச்னை, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம், மெனோபாஸ், ஸ்ட்ரெஸ், அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை, அதிக ரத்த இழப்பு, கீமோதெரபி, கருத்தடை மாத்திரை பயன்பாடு, சிலவகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும்.

வைட்டமின் சி, இரும்புச்சத்துக் குறைபாடு, கொழுப்புச்சத்தே இல்லாதது, துத்தநாகக் குறைபாடு என சத்துக் குறைபாடுகளும் கூந்தல் உதிர்வுக்கு காரணமாகலாம். எனவே காரணமறிந்துதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மினாக்ஸிடில் எஃப்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டதுதான். உதிர்ந்த கூந்தலை மீண்டும் வளரச் செய்கிற ஒருவகை மருந்துதான். இது ரத்தநாள விரிவூக்கியாகச் செயல்பட்டு, ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால், கூந்தலுக்கு ரத்தத்தின் வழியே அதிக ஆக்ஸிஜன் கிடைக்க வழி செய்கிறது. அதனால் கூந்தல் அடர்த்தியாக, வேகமாக வளரத் தொடங்கும்.

கூந்தலானது வளரும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம், உதிரும் பருவம் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. கூந்தலை வளரும் பருவத்தில் நீண்ட காலத்துக்கு வைத்திருப்பதில் மினாக்ஸிடில் முக்கியப் பங்காற்றுகிறது. மினாக்ஸிடில் பயன்படுத்தத் தொடங்கும்போது முதலில் லேசான முடி உதிர்வு இருக்கும். ஓய்வெடுக்கும் பருவத்தைக் குறுக்கி, வளரும் பருவத்தை நீட்டிக்கும். புதிய முடிகள் வளர உதவும்.

கூந்தல்

மினாக்ஸிடில் என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டியது. அதை யார், எத்தனை சதவிகிதம் பயன்படுத்த வேண்டும் என ஒரு கணக்கு இருக்கிறது. அதைத் தாண்டி உபயோகிக்கும்போது முடி உதிர்வு அதிகமாக இருக்கலாம். மினாக்ஸிடில் பயன்படுத்தத் தொடங்கி 8 வாரங்களில் முடி வளர்ச்சியைப் பார்க்க முடியும். 4 மாத முடிவில் முடி உதிர்வு முற்றிலும் நின்று, புதிய முடி வளர்ச்சி இருப்பதையும் பார்க்கலாம்.

மினாக்ஸிடிலை போலவே கூந்தல் வளர்ச்சிக்கு உதவ பல வகையான சீரம்கள் கிடைக்கின்றன. மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணம் அறிந்து, அதற்கேற்ற சீரம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். கூந்தலுக்கான சீரம்களில் தலையில் தடவி, மசாஜ் செய்யும் வகை, முடிக்கற்றைகளில் மட்டும் தடவுவது என இருவகை உண்டு. இதில் முதல் வகை கூந்தல் வளர்ச்சிக்கும், அடுத்தது கூந்தலை ஸ்டைலாக்கவும் உதவுபவை.

மினாக்ஸிடில் போலவே ஃபினாஸ்ட்டரைடு கலந்த சீரமும் கூந்தல் வளர்ச்சிக்குப் பரிந்துரைக்கப்படும். இவை தவிர கஃபைன், ரிடென்சில் என பல மூலக்கூறுகள் அடங்கிய சீரம்கள் கிடைக்கின்றன.

Serum

சீரம் தவிர்த்து, சில வகை எண்ணெய்களும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுபவை. ரோஸ்மெர்ரி ஆயில், பூசணிவிதை ஆயில், அவகாடோ ஆயில், க்ரீன் டீ, பெப்பர்மின்ட் ஆயில் போன்றவை சில உதாரணங்கள்.

கூந்தலைப் பளபளப்பாக்கி, வறட்சியைப் போக்கி, சிக்கு இன்றி வைக்க உதவும் சீரம்களும் கிடைக்கின்றன. இந்த வகை சீரத்தை, தலைக்குக் குளித்த பிறகு, கூந்தல் 75 சதவிகிதம் உலர்ந்ததும், சில துளிகள் மட்டுமே எடுத்து உள்ளங்கைகளால் தேய்த்து முடியின் நுனி முதல் மத்தியப் பகுதிவரை உபயோகித்து அப்படியே விட வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...